Skip to main content

மான் கொம்பு பதுக்கல்; நகைக்கடை அதிபர் உள்ளிட்ட 5 பேருக்கு அபராதம்! சப்ளை செய்த நபர் கைது!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Deer com hoarding; 5 fined, including jeweler

 

சேலத்தில், மான் கொம்பை பதுக்கி வைத்திருந்ததாக நகைக்கடை அதிபர் உள்ளிட்ட 5 பேருக்கு அபராதம் விதித்த வனத்துறை அதிகாரிகள், சப்ளை செய்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

 


சேலத்தில் புலி பல், புலி நகம், யானை தந்தம், நரி வால், நரி பல், மான் கொம்புகள் மூலம் ஆபரணங்கள் செய்து விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள வனத்துறை கண்காணிப்புக்குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் இருந்து வனத்துறை ஏ.சி.எப். மகேந்திரன் தலைமையிலான ஒரு குழுவும், சேலம் தெற்கு வனச்சரகர் சின்னத்தம்பி தலைமையிலான ஒரு குழுவும் சேலத்தில் உள்ள நகைக்கடைகளில் சில நாள்களுக்கு முன்பு திடீர் சோதனையில் இறங்கினர். 

 

சேலம் பஜார் தெருவில், உள்ள ஒரு நகைக்கடையில் 2 மான் கொம்பு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதே பகுதியில் வேறு சில நகைக்கடைகளில் சோதனை நடத்தியபோது சில துண்டுகள் சந்தனக்கட்டை, புலி நகங்கள், மேலும் ஒரு மான் கொம்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து நகைக்கடை அதிபர் மோகன் காந்தி, நந்து சேட் என்கிற நந்தகுமார், செந்தில், வெங்கடேஷ் பிரபு, ஆபரண கல் வியாபாரம் செய்து வரும் குமரேசன் ஆகியோரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். 

 

இவர்களுக்கு குமரேசன்தான் மான் கொம்புகளையும், புலி பல், புலி நகங்களையும் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அவர், சேலம் பஞ்சந்தாங்கி ஏரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஜெயமந்திரி என்கிற அரவிந்த் என்பவரிடம் வாங்கியிருப்பது தெரிய வந்தது. நந்து சேட் என்கிற நந்தகுமார் கடையில் இருந்து கைப்பற்றப்பட்ட 5 புலி நகங்களும் போலியானவை என்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேநேரம் அவருடைய கடையில் இருந்து 1.77 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

வெங்கடேஷ்பிரபு, செந்தில் ஆகியோரிடம் இருந்து உடைந்த மான் கொம்பு துண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதற்காக இவர்கள் இருவருக்கும் தலா 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் விலங்கு பொருள்களை கடைக்காரர்களக்கு விற்பனை செய்த குமரேசனுக்கும், சந்தன கட்டைகளை பதுக்கி வைத்திருந்த நந்தகுமார் ஆகியோருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், மான் கொம்பை நகைக்கடையில் பதுக்கி வைத்திருந்த மோகன்காந்திக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 


அட்டவணைப்படுத்தப்பட்ட விலங்குகளின் பொருள்களை விற்பனை செய்ததாக ஜெயமந்திரி என்கிற அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.