தீபாவளி பண்டிகையை முன்னிட்டுபொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்றுமுதல் (01/11/2021) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர்களுக்குச் சென்றிட 16,540 பேருந்துகளும், திரும்பி வர 17,719 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இன்றுமுதல் நவம்பர் 3ஆம் தேதி வரை மொத்தம் 16,540 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மக்கள் திரும்பி வர ஏதுவாக நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை மொத்தம் 17,719 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்கள் அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி, பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.