Skip to main content

தீபாவளி வாழ்த்து கூறிய முன்னாள் அமைச்சர் போஸ்டர் கிழிப்பு!

Published on 07/11/2018 | Edited on 07/11/2018
po

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அதிமுகவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஒரு கோஷ்டியாகவும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 


          இந்த நிலையில் தான் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆதரவாளர்களான பழனியை சேர்ந்த ராஜாமுகமது மற்றும் சதீஸ்குமார்  ஆகியோர் தீபாவளி வாழ்த்து கூறி பழனி நகரில் உள்ள பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து இருந்தனர்.

 

p

 

 அந்த பேனர்களில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் படம் போடவில்லை.  அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சீனிவாசன்மகன்  ராஜ்மோகன் மற்றும்  ஆதரவாளர்களும் தீபாவளிக்காக திண்டுக்கல் மாநகரில் வைக்கப்பட்ட தீபாவளி வாழ்த்து பிளக்ஸ் பேனர்களில் முன்னாள்  முப்பெரும் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் படம் மற்றும் அவருடைய மச்சான் படம்  போடாமல்  அங்கங்கே வைத்து .


    இதைக் கண்டு லோக்கலில் உள்ள விஸ்வநாதன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் மட்டுமல்லாமல் அந்த பிளக்ஸ் பேனருக்கு போட்டியாக நகரம், ஒன்றிய  அதிமுக 
சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து போஸ்டர்கள்  இரண்டு மாடல்களில் விஸ்வநாதன் ஆதரவாளர்களான நெப்போலியன் மற்றும் திருமாறன் தலைமையிலான ர.ர.க்கள் அடித்து மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் ஒட்டி இருக்கிறார்கள்.

 

  இப்படி அடிக்கப்பட்ட தீபாவளி  வாழ்த்து போஸ்டர்களில் அமைச்சர் சீனிவாசன் படம் போடவில்லை. அதைகண்டு சீனி ஆதரவாளர்கள் டென்ஷன் அடைந்து விட்டனர்.  
  இந்த நிலையில் தான்  இப்படி விஸ்வநாதன் ஆதரவாளர்களால்  ஒட்டப்பட்ட தீபாவளி வாழ்த்து போஸ்டர்கள் நகரில் சில இடங்களில்  கிழித்து போட்டு இருப்பதை கண்டு விச்சு ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

 

p


     இப்படிப்  பட்ட கீழ் தரமான வேலைகளை எல்லாம் அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்கள் தான் செய்து இருப்பார்கள் என்று தெரிகிறது.  எங்க முன்னாள்  அமைச்சர்  அண்ணன் விஸ்வநாதன் அம்மா மூலம்  தான் கட்சிக்கு வந்தாரே தவிர சீனிவாசன்  எல்லாம் கட்சிக்கு கொண்டு வர வில்லை.  அதனால் தான்  அம்மா முப்பெரும் துறையை கொடுத்தார்.  அதன் மூலம்  மாவட்டத்தில் கட்சியை வளர்த்து கொண்டு  கட்சிக்காரர்களுக்கும் கட்சிகாரர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் நிவர்த்தி செய்து தன்னால் முடிந்த பண உதவிகளையும் செய்து வந்தார்.

 

   அந்த நன்றி விஸ்வாசத்திற்காகத் தான்  கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அண்ணன் விஸ்வநாதன் படம் போட்டு தீபாவளி வாழ்த்து போஸ்டர்கள் அடித்து . அது பொறுக்க முடியாமல் தான் சீனி ஆதரவாளர்கள்  அந்த போஸ்டர்களை கிழித்து விட்டனர் என்று கூறினார்கள்.


  ஆனா‌ல் அமைச்சர்  சீனிவாசன் ஆதரவாளர்களோ நாங்க அந்த போஸ்டர்களை எல்லாம்  கிழிக்க வில்லை.  அப்படி பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என்று கூறினார்கள். இருந்தாலும் இச் சம்பவம் திண்டுக்கல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதற்கு பா.ஜ.க வெட்கப்பட வேண்டும்” - ஜெயக்குமார் ஆவேசம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Jeyakumar raves on BJP should be ashamed of this

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்திருந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று பேசினார். 

இதற்கிடையே, பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி அ.திமு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.கவினரின் செயலுக்கு புதுச்சேரி அ.தி.மு.க பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பா.ஜ.க பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களை பயன்படுத்துகிறீர்கள்?. அதிமுக தலைவர்களை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று இதன்மூலம் தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார். 

Next Story

போராடினால் 20,000 ரூபாய் அபராதம்; பல்கலைக்கழகத்தின் அறிவிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு 

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
20,000 rupees fine for fighting; Students protest against the university's announcement

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) அவ்வப்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முன்பு அங்கு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் பலமுறை கலவரத்திலும் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் போராடினால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஜேஎன்யூ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு 100 மீட்டருக்குள் மாணவர்கள் தர்ணா அல்லது சுவரொட்டிகளை ஒட்டினால் 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தேச விரோத செயலில் மாணவர்கள் ஈடுபட்டால் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வகுப்புவாத, சமூக மோதல் அல்லது தேச விரோத கருத்துக்களைக் கொண்ட சுவரொட்டிகள் அல்லது துண்டு பிரசுரங்களை பல்கலைக்கழகத்தில் ஒட்டுவதற்கு அனுமதி இல்லை.

உண்ணாவிரதம், தர்ணாவில் ஈடுபடும் மாணவருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். படிக்கும் காலத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைகள் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற்றப்படுவர். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை விவரம் குறித்த நகல் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மற்றும் இணையத்திலும் பதிவேற்றப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் கருத்துரிமையை நொறுக்கும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.