Skip to main content

தீபத்திருவிழா – விடுதி உரிமையாளர்களுக்கு எஸ்.பி அறிவுரை... கட்டணத்தை குறைக்காத விடுதிகள்!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் திருகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 14ந்தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் 10 ந்தேதி 2662 அடி உயரம்முள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனைக்காண 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 Deepam Festival - SP Advice for Hotel Owners ...


பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன்படி மாவட்ட காவல்துறை சார்பில் 9 ஆயிரம் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களை அழைத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஒரு கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் திருவிழாவின்போது விடுதியில் தங்க வருபவர்களிடம் வாங்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கபட்டது. அதேபோல், தங்குபவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை சோதனையிட வேண்டும் எனச்சொல்லப்பட்டது. சந்தேகப்படும்படி விடுதிகளில் தங்கினால் அவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனச்சொல்லப்பட்டுள்ளது என்கிற தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தீபத்திருவிழா, மாதம் தோறும் பௌர்ணமியன்று, அறை வாடகை பல மடங்கு உயர்த்தி வாங்கப்படுகிறது என்பது பக்தர்களின் குற்றச்சாட்டு. இதனை சீர்ப்படுத்த வேண்டும், விடுதிகளுக்கு தகுந்தார்போல் மாவட்ட நிர்வாகம் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்கிற வேண்டுக்கோள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்வதில்லை. இதுப்பற்றி காவல்துறை தரப்பில் ஹோட்டல் உரிமையாளர்களிடம் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கட்டணம் உயர்த்தி வாங்கப்படுவது பற்றி விடுதி உரிமையாளர்கள் சிலர் நம்மிடம் முன்பு ஒருமுறை கூறியபோது, திருவிழா காலங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி உயர் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் வருகிறார்கள் ரூம்களை புக் செய்து விடுகிறார்கள். அதுவும் முன்கூட்டியே எங்களுக்கு இத்தனை ரூம் எனச்சொல்லிவிடுகிறார்கள். அதற்கான கட்டணத்தை தருவதில்லை. அப்படி வாங்கப்படும் ரூம்களுக்கான கட்டணத்தை நாங்கள் யாரிடம் வசூலிப்பதில்லை. இங்கு ரூம் போட வருபவர்களிடம் தானே. அதனைத்தான் நாங்கள் செய்கிறோம் என்கிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.