Skip to main content

தீபத்திருவிழா – விடுதி உரிமையாளர்களுக்கு எஸ்.பி அறிவுரை... கட்டணத்தை குறைக்காத விடுதிகள்!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் திருகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 14ந்தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் 10 ந்தேதி 2662 அடி உயரம்முள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனைக்காண 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 Deepam Festival - SP Advice for Hotel Owners ...


பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன்படி மாவட்ட காவல்துறை சார்பில் 9 ஆயிரம் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களை அழைத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஒரு கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில் திருவிழாவின்போது விடுதியில் தங்க வருபவர்களிடம் வாங்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கபட்டது. அதேபோல், தங்குபவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை சோதனையிட வேண்டும் எனச்சொல்லப்பட்டது. சந்தேகப்படும்படி விடுதிகளில் தங்கினால் அவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனச்சொல்லப்பட்டுள்ளது என்கிற தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.

தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தீபத்திருவிழா, மாதம் தோறும் பௌர்ணமியன்று, அறை வாடகை பல மடங்கு உயர்த்தி வாங்கப்படுகிறது என்பது பக்தர்களின் குற்றச்சாட்டு. இதனை சீர்ப்படுத்த வேண்டும், விடுதிகளுக்கு தகுந்தார்போல் மாவட்ட நிர்வாகம் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்கிற வேண்டுக்கோள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்வதில்லை. இதுப்பற்றி காவல்துறை தரப்பில் ஹோட்டல் உரிமையாளர்களிடம் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடதக்கது.

கட்டணம் உயர்த்தி வாங்கப்படுவது பற்றி விடுதி உரிமையாளர்கள் சிலர் நம்மிடம் முன்பு ஒருமுறை கூறியபோது, திருவிழா காலங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி உயர் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் வருகிறார்கள் ரூம்களை புக் செய்து விடுகிறார்கள். அதுவும் முன்கூட்டியே எங்களுக்கு இத்தனை ரூம் எனச்சொல்லிவிடுகிறார்கள். அதற்கான கட்டணத்தை தருவதில்லை. அப்படி வாங்கப்படும் ரூம்களுக்கான கட்டணத்தை நாங்கள் யாரிடம் வசூலிப்பதில்லை. இங்கு ரூம் போட வருபவர்களிடம் தானே. அதனைத்தான் நாங்கள் செய்கிறோம் என்கிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.