Skip to main content

என்ன செய்யலாம்? தொண்டர்களிடம் கருத்து கேட்ட ஜெ.தீபா!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில, மாவட்ட பேருராட்சி, ஊராட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கரூரில் நடத்தப்படும் என்கிற அறிவிப்போடு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியின் மீது அபிமானமுள்ள சீனியர்கள் யார் இருந்தாலும் அழைத்துக்கொண்டு வாருங்கள் என்று நிர்வாகி தீபா அறிவிப்பு கொடுத்திருந்தார். கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை நிர்ணயம் செய்யும் கூட்டம் என்ற அறிவித்து இருந்ததால் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வேன்களில் வந்து குவிந்தனர். 
 

 

 

இந்த கூட்டத்தின் ஏற்பாடுகளை கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமுருகன் திருமணம மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் வி.கே.துரைசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஞானசேகரன், துணை செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பொது செயலாளர் ஜெ.தீபா கலந்து கொண்டார். 

 

Deepa Party in Karur


 

கூட்டம் அரங்கு நிரம்பி வழிந்தாலும் தீபா என்ன சொல்லப்போகிறார் என்று எல்லோரும் ஆவலாக காத்து கொண்டிருந்த நேரத்தில் திடீர் என சுட சுட அப்போது தான் அடித்திருந்த கருத்து கேட்பு படிவம் ஒன்று எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அதில் 
 

முதல் கேள்வி - தனிக்கட்சி தொடங்கி அ.தி.மு.க.வை வழி நடத்துவதா? 
 

இரண்டாவது கேள்வி - எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அ.தி.மு.க.வை வழிநடத்துவதா? 
 

மூன்றாவது கேள்வி - தனிக்கட்சி தொடங்கி மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பதா என்று படிவம் ஒன்று வழங்கப்பட்டது. 
 

இதில் தங்கள் விருப்பத்தை தொண்டர்கள் மார்க் செய்து அளித்தனர். 
 

கருத்து படிவம் பூர்த்தி செய்தவர்களிடம் பேசிய போது, 

இதில் முதல் இரண்டு கேள்விகளுக்கு கட்சியினர் இடையே எந்த பதிலும் இல்லை ஆனால் மூன்றாவது கேள்வியை வாசிக்கும் போது மட்டும் அங்கிருந்தவர்களிடையே பெரிய கைதட்டலுடன் கூடய ஆரவாரம் எழுந்தது. அது அடங்குவதற்கே பல நிமிடம் பிடித்தது. இதையே தான் அந்த கருத்து படிவத்திலும் எதிரொலித்து இருக்கும் என்கிறார் கட்சியின் மூத்த உறுப்பினர் மகாலிங்கம் என்பவர். பின்னர் கூட்டத்தில் பேசிய முக்கிய அமைப்பாளர்கள் பலரும் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

 

Deepa Party in Karur


 

பின்னர் கடைசியாக பேசிய ஜெ.தீபா இது வரை எந்த கூட்டத்திலும் இல்லாதா அளவிற்கு 1 மணிநேரம் பேசினார்.
 

அதில் அவர் கூறியதாவது, 

ஜெயலலிதா இறப்பில் உள்ள சதிகள், சூழ்ச்சிகள், மர்மங்கள் என்ன? என்று இதுவரை தெளிவாகவில்லை. எல்லா உண்மைகளும் மறைக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க.வின் 1½ கோடி தெண்டர்களும் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த சூழ்ச்சியாளர்களை விரட்டி அடிக்க வேண்டும். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார், யாரோ இன்று மகுடம் சூட்டியிருக்கிறார்கள். வேறு வழியின்றி மக்களும் சகித்து கொள்கின்றனர்.


 

Deepa Party in Karur


 

இதை மாற்றுவது தொண்டர்களாகிய உங்கள் கையிலும், மக்கள் கையிலும் உள்ளது. தீய எண்ணம் உடையவர்களிடம் இருந்து கழகத்தை மீட்க வேண்டும். நீட் தேர்வு, 8 வழிச்சாலை திட்டம் போன்றவற்றை ஜெயலலிதா இருந்திருந்தால் எதிர்த்திருப்பார். தூத்துக்குடி துப்பாக்கி சூடும் நடந்திருக்காது.

இன்றைக்கு நடந்து கருத்து கூட்டம் போன்று தமிழகம் முழவதும் மாவட்டம் தோறும் கட்சிகாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் எடுத்து எனக்கு அனுப்புங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை கேட்டு நான் நடந்து கொள்கிறேன்.

 

 


பா.ஜ.க.வினர் தமிழகத்தை அவர்களது வீட்டு வேலைக்காரர்கள் போல் நடத்துகிறார்கள். பா.ஜ.க. ஆட்சி புரியும் மற்ற மாநிலங்களில் ஊழல்களே நடக்கவில்லையா? அதற்கு முதலில் அவர்கள் பதில் சொல்லட்டும். அ.தி.மு.க. பொது செயலாளர்களை தொண்டர்கள் தான் நேரடியாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி பதவியேற்றுள்ளனர்.

இது தவறு. நான் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றாலும் ஜெயலலிதா வகித்த அனைத்து பதவிகளையும் ரத்த வாரிசு என்ற அடிப்படையில் சட்டபூர்வமாக நான் வகிக்க முடியும். ஓ.பி.எஸ், இ.பி.எஸ். கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று கொண்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் சட்ட ரீதியாக போராடுவேன். ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை தொடர அ.தி.மு.க.வை கைப்பற்றுவதே எனது நோக்கம். இதில் உறுதியாக இருப்பேன். இவ்வாறு கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.