Advertisment

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

A deep depression in the Bay of Bengal

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாகப் பெய்து வருகிறது. இதனையொட்டி தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் நேற்று (23.11.2024) வெளியிட்டிருந்த வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், ‘தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காலை 08.30 மணி அளவில் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

Advertisment

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 25ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பெரு பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி முதல் குமரிக்கடல் பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது’ எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. மேலும் இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் கணித்துள்ளது. இது இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடந்து இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

weather sea
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe