Skip to main content

திமுக பேரணிக்கு தடைகோரி உயர்நீதிமன்றத்தில் மனு- அவரச வழக்காக விசாரிக்க முடிவு 

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மாணவர்கள் மற்றும் அரசியல் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தமிழகத்திலும் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Decision to probe DMK rally in High Court

 

இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்ப்பு பேரணி என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணியை நடத்த திட்டமிட்டிருக்கிறது. இதற்கான அழைப்புகளும் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாளை நடத்தவிருக்கும் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் தொடர்ந்த இந்த மனுவானது அவசர வழக்காக இன்று இரவு 8 மணிக்கு விசாரணைக்கு வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்