Skip to main content

பாஜக மாவட்ட தலைவர் மீது கந்துவட்டி புகார்! – அடியாட்களான கட்சியினர்! 

Published on 25/07/2022 | Edited on 25/07/2022

 

Debt issue bjp leader

 

திருவண்ணாமலை மாவட்ட பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மீது திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் கந்துவட்டி புகார் தமிழக காவல்துறை தலைவருக்கு அனுப்பியுள்ளார். இது திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையிடம் விசாரணைக்கு வந்துள்ளது. புகார் தந்த தேவராஜிடம் நாம் பேசியபோது, “திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே ஜெஸி என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன். ஒரு ரூபாய்க்கு ஸ்டாம்பு ஃசைஸ் ஸ்டிக்கர் போட்டோ பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எடுத்து தருகிறேன். 1 ரூபாய் என்பது மிக குறைந்த கட்டணம், அதனை நான் சேவையாக செய்கிறேன். அதேபோல் புரோக்கர் கமிஷன் வாங்காமல் வீடு, கடை வாடகைக்கு பிடித்து தருவது, வயதானவர்களுக்கு செக்யூரிட்டி வேலை வாங்கி தருவது போன்றவற்றை செய்கிறேன். எனக்கு வருமானம் என்றால் பள்ளி, கல்லூரி, நிறுவனங்களுக்கு ஐடி கார்டு தயார் செய்து தருவதில் வரும் வருமானத்தில் இருந்துதான் பலகாரியங்கள் செய்து வருகிறேன். கீழ்நாத்தூரில் என் வீடு உள்ளது, என் மனைவி இறந்துவிட்டார். மகன்கள், மகள் இருக்கிறார்கள். நான் சமூகசேவை செய்யப்போகிறேன் எனச்சொல்லிவிட்டு குடும்பத்தில் இருந்து விலகி தனியே வந்துவிட்டேன். 

 

பாஜக மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தான் ஒரு டேட்டா சென்டர் தொடங்கப்போவதாகவும், அதற்கு ஒரு வாடகை வீடு தேவை எனச்சொல்லி என்னை சந்தித்தார். அப்போதுதான் அவருடன் எனக்கு அறிமுகம். சில வீடுகளை காட்டினேன், வேண்டாம் என்றார். அப்போது ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது ஜீவானந்தம் என்னிடம் 2 லட்ச ரூபாய் பணம் தந்து, அக்கவுண்ட்டில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள் நான் கேட்கும்போது தாங்கள் என்றார். நானும் வாங்கி வைத்திருந்தேன். ஒரு  மாதம் கடந்து பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள், என்னிடமிருந்தால் செலவாகிடும் எனச்சொன்னேன். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை, செலவு செய்துக்குங்க நான் கேட்கும்போது தாங்கள் என்றார். நானும் அந்த பணத்தை எடுத்து மெட்டீரியல்ஸ் வாங்கி கல்லூரிகளுக்கு ஐடி கார்டு தயார் செய்துவிட்டேன். 6 மாதம் கடந்த நிலையில் ஒருநாள் போன் செய்து நாளைக்கு பணம் வேண்டும், பணம் தரலன்னா கடையை பூட்டிடுவன்னு சொன்னார். நாளைக்கே எப்படிங்க 1 மாசம் டைம் தாங்கன்னு கேட்டன் தரல.

 

Debt issue bjp leader

 

மறுநாள் அவரும், அவரோட மனைவியும் வந்து என் கடையில் வேலை செய்துக்கொண்டிருந்த 8 பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு கடையை பூட்டி சாவி எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க. நான் அதிர்ச்சியாகிப்போய் என்னங்க தொழில் செய்யற கடையை பூட்டிட்டிங்க. 10 நாள்ள பணத்தை தயார் செய்து தர்றன்னு சொன்னன், அதைக்கேட்டுக்கல. உள்ள டெலிவரி செய்ய வேண்டிய பொருட்கள் இருக்கு அதை டெலிவரி செய்தால் உடனே  லட்சம் ரூபாய் கிடைக்கும். அதை கொண்டு வந்து தர்றன், மீதி 10 நாள்ள தர்றன்னு சொன்னதையும் கேட்கல. நான் அதிருப்தியாகி மும்பை போய்ட்டு அங்க சின்ன சின்ன வேலைகள் செய்துக்கிட்டு இருந்தன். ஒரு வருஷம் பொருத்து 2019 தொடக்கத்தில் போன் செய்து கூப்பிட்டார் ஜீவானந்தம். மும்பையில் இருந்து வந்த எங்கிட்ட கடை சாவியை தந்தவர் கடையை திறந்துக்க 6 மாதத்தில் பணம் தந்துடனம்னு சொன்னவர், நீங்க பணம் தர்றவரைக்கும் 2 லட்சத்துக்கு மாதம் 10 ஆயிரம் வட்டி தரனம்னு சொன்னார். நானும் சரின்னு வாங்கிக்கிட்டு வந்து கடையை திறந்தன். மாதாமாதம் வட்டி தந்துக்கிட்டு வந்தன்.


அப்போதுதான் கொரோனா வந்து, கடைகள் மூடப்பட்டது. வட்டி பணம் தரமுடியல. ஒருநாள் சதிஷ்குமார் என்பவர் அடியாட்களுடன் வந்து, பணம் தரலன்னா கடையை மூடுவன்னு மிரட்டனார். அவர்தானே பணம் தந்தார், நீங்க ஏன் கேட்கறிங்கன்னு கேட்டதுக்கு அவர்தான் உங்கிட்டிருந்து பணம் வசூல் செய்யச் சொல்லியிருக்கார்.  10 நாள் டைம் தந்து பணம் தரலன்னதும் அவரும் கடையை மூடி சாவி எடுத்துக்கிட்டு போய்ட்டார்.


ஜீவானந்தத்துக்கிட்டப்போய் கொரோனாவால் வருமானம் இல்லை, சீக்கிரம் பணம் தந்துடறன்னு சொன்னன். செட்டிதெருவில் ஒரு மண்டபத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தாங்க பாஜக பிரமுகர்கள். வாங்கிய இரண்டு லட்சத்துக்கு பதில் 3 லட்சமா தரனும், அதுவரைக்கும் வட்டி தரனும் அப்படின்னு முடிவாகி சாவி தந்தாங்க. கடையை திறந்து நடத்திக்கிட்டு வந்தன்.


கடந்த 2022 மே மாதம் 10 பேரோட கடைக்கு வந்தார் பாஜகவின் நகர செயலாளரா இருக்கற செந்தில்வேலன். மாவட்ட தலைவர் ஜீவானந்தத்திடம் வாங்கன பணத்தை நீ எங்கிட்டதான் தரனம்னு சொல்லி ரொம்ப கேவலமாக அசிங்கமா பேசனார். என்னை மிரட்டி 4 ப்ளாங் செக், வெத்து பேப்பர், எழுதாத பாண்ட் பத்திரத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கனார். என் கடை சாவியை நான் அவர்களிடம் தருவதுபோல் போட்டோ எடுத்துக்கிட்டாங்க. இன்னொரு பத்திரத்தில் நான் ஒருத்தருடைய வீட்டை குத்தகைக்கு வாங்கி தருவதா சொல்லி 2 லட்சம் பணம் வாங்கியதாகவும், 3 லட்ச ரூபாய் திருப்பி தரவேண்டும். அதுவரை கடையை அவர் பார்த்துக்கொள்வதாக சொல்லி நான் கையெழுத்து வாங்கிக்கிட்டாங்க. இப்பவும் கடை மூடியே இருக்கும்.

 

நான் பணம் வாங்கியது உண்மை, தரமாட்டன்னு சொல்லவில்லை. எனக்கு டைம் தந்தால்தானே பணத்தை தர்றதுக்கு. முதல்ல கடையை மூடி சாவி எடுத்துக்கிட்டு போனதால் பொருட்களை டெலிவரி செய்ய முடியாததால் முதலில் 7 லட்ச ரூபாய் நஷ்டம். இரண்டாவது முறை கடையை மூடினப்ப 5 லட்சம் நஷ்டம். எனக்கு தொழில் நிமித்தமா வெளியில் இருந்து வரவேண்டிய தொகையே 20 லட்சத்துக்கு மேல இருக்கு. அதில் பாதிக்கு மேல வராது. இப்போதும் அவரோட பணத்தை தர்றதுக்கு இரண்டு, மூனு மாசம் டைம் தாங்க, தொழில் செய்ய விடுங்கன்னுதான் கேட்கறன். தொழில் செய்யவிடாம கடையை பூட்டிக்கிட்டா எப்படி பணம் தரமுடியும்?. அதான் போலிஸில் புகார் தந்திருக்கன்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.