Advertisment

கோயில் உட்பிரகாரத்தில் ஏற்பட்ட மரணம்! அடைக்கப்பட்ட நடை! 

Death in the Trichy Samayapuram temple precincts

Advertisment

திருச்சி மாவட்டம், மேலசிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (33).இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், நேற்று (20.09.2021) இரவு 8 மணியளவில் சமயபுரம் கோவிலுக்குச் சென்றுள்ளார்.பொது தரிசன வரிசையில் கோயில் உள் பிரகாரத்தில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கோயில் உட்பிரகாரத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதால் கோயில் நடை அடைக்கப்பட்டது.

temple trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe