Skip to main content

மாரடைப்பால் கல்லூரி மாணவி ஹாஸ்டலில் மரணம்

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
h a

 

கோவை அரசு கலைக்கல்லூரியில் BSC இரண்டாம் வருடம் பயின்று வரும் மாணவி ஹரிப்பிரியா.  இவர் சத்தியமங்கலத்தில் இருந்து கோவையில் கல்லூரியில் பயின்று வருகிறார் .  கல்லூரி அருகிலேயே ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார்.  இவர் மிகுந்த தைரியசாலி.   படிப்பிலும் அதிக கெட்டித்தனம் அதிலும் நிறைய சுட்டித்தனம்.  அதுபோக விளையாட்டு  மற்றும் என்சிசி இது போன்ற விஷயங்களில் மிகுந்த ஆர்வமுடையவர். 

 

 இந்த நிலையில் கடந்த 17ம் தேதி கோவை அரசு கலைக் கல்லூரியில் இருந்து சரவணம்பட்டி அருகே ஒரு பிரபலமான தனியார் கல்லூரிக்கு என்சிசி பயிற்சிக்காக சென்றுள்ளார் .  என்சிசி பயிற்சியிலும் அனைத்துவிதமான திறமைகளையும் காட்டியிருக்கிறார்.  இப்படி இருக்க,  நேற்று முன் தினம் இரவு உணவு எல்லாம் அருந்திவிட்டு தனது சக தோழிகளோடு கேலியும் கிண்டலுமாய் விளையாடி சுட்டித்தனம் செய்துவிட்டு உறங்க சென்றிருக்கிறார். இரவு சரியாக 11 மணி 45 நிமிடங்கள் எட்டும் நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகிலிருந்த தோழியை எழுப்பி தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று கூறிய ஹரிப்பிரியாவை கல்லூரி நிர்வாகத்தினர்  உடனடியாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் . அங்கு பரிசோதனை செய்த செய்த டாக்டர் ஹரிப்பிரியா இறந்த தகவலை கூறியிருக்கிறார்.  பின்பு சரவணம்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

  சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் அவர்கள்  ஹரிப்பிரியாவின்  பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில்  மருத்துவமனைக்கு அலறியபடி ஓடி வந்தனர். ஹரிப்பிரியாவின் தாயும் தந்தையும் இறந்த துக்கத்தை தாங்கமால் கண்ணீர் விட்டபடியே நின்றிருந்தார். இதை கண்ட மருத்துவமனையே ஒரு நிமிடம் ஆடித்தான் போனது. பின்பு ஹரிப்பிரியாவின்  தந்தை பழனிச்சாமி அவர்களிடம் கேட்டபோது,  மிகுந்த துயரத்தோடு எப்பொழுதும் ஹரிப்பிரியா என் செல்ல மகள் அவள் இறந்த செய்தி கேட்டு ஒரு நொடி நானே துடி துடித்து போய்விட்டேன். பின்பு மருத்துவமனை வந்து கேட்டபொழுது அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது என்று மிகவும் வேதனையோடு கூறியிருக்கிறார். காலையில் ஓடியாடி தன்னோடு பேசிக்கொண்டிருந்த தன் தோழி இப்போது இல்லை என்ற தகவல் கேட்டு பழகிய அனைத்து தோழிகளும் கோவை அரசு மருத்துவமனையில் குழுமியிருந்தனர்.  பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஹரிப்பிரியாவின் உடல் சத்தியமங்கலம் எடுத்துச்செல்ல பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

கல்லூரி மாணவியின் கொலை சம்பவம்; சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட அமைச்சர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
The minister apologized for the controversy on The incident of a college student in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார்.

இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜ்ஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

The minister apologized for the controversy on The incident of a college student in karnataka

அதே வேளையில், கல்லூரி மாணவி நேகா கொலை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடகா உள்துறை அமைச்சர் பரமேஷ்வராவின் கருத்து சர்ச்சையானது. இது தொடர்பாக பேசிய பரமேஷ்வரா, “ நேஹாவும் குற்றம் சாட்டப்பட்ட பயாஜும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், நேஹா அவரிடமிருந்து விலகி இருக்க முயன்றுள்ளார். மேலும், பயாஜ்ஜை திருமணம் செய்ய நேகா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி நேஹாவை கொன்றுள்ளார். இது லவ் ஜிஹாத் வழக்கு என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார். இவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது கருத்து நேகாவின் பெற்றோரை பாதித்திருந்தால், அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.