Skip to main content

ரூ.5,000த்தில் ஆரம்பித்து... ரூ.1,000த்திற்கு படிந்த இறப்பு சான்றிதழ் பேரம்...

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
kovilpatti

 

தன்னுடைய தந்தையின் இறப்பு சான்றிதழ் கேட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க, அங்குப் பணியாற்றும் ஊழியரோ, "இறப்பு சான்றிதழ் வேண்டுமாயின் ரூ.5000 வேண்டும்” என பேரத்தைத் துவக்கி ரூ.1000-த்தில் பேரத்தை முடித்துள்ள வீடியோ வைரலாக வாட்ஸ் ஆப்பிள் பரவுவதால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலையை எள்ளி நகையாடியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் நாரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய தந்தை சுப்புலு கடந்த 2011-ம் ஆண்டு இயற்கையாக மரணமடைந்துள்ளார். அப்பொழுது இறப்பு சான்றிதழை வாங்க மறந்துவிட்ட நிலையில், தற்பொழுது மாரிமுத்துவின் மகனான ஒண்டிவீரன் தன்னுடைய தாத்தா சுப்புலுவிற்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்க, அப்பொழுது இறந்த சுப்புலுவின் இறப்பு சான்றிதழ் தேவைப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 23.07.18 அன்று தன்னுடைய தாத்தாவின் இறப்பு சான்றிதழ் கேட்டு அதற்கான முறையான விண்ணப்பங்கள், நாளிதழ் ஒன்றில் விளம்பரம் எல்லவாற்றையும் இணைத்து சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், சான்றிதழ் கிடைக்கவில்லை. இவ்வேளையில் அங்கு பணி செய்யும் நாசர் என்பவர், "காலதாமதம் ஆயிற்று, உங்களுக்கும் வீட்டைக் கட்டியாகனும். இப்படியே இருந்திங்கீனா ஒரு சான்றிதழும் வாங்க முடியாது. ரூ.5000-த்தைக் கொடுங்க இறப்பு சான்றிதழ் உடனே தார்றேன்" என பேச்சை துவங்கியிருக்கின்றார். அவருடைய செல்போன் எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த மாரிமுத்து, "எங்களால் அவ்வளவு தரமுடியாது" என சம்பந்தப்பட்ட ஊழியர் நாசரிடம் பேச்சுக் கொடுக்க, அவரோ ரூ.1000-த்திற்கு பேரம் படிந்து இறங்கி வந்துள்ளார். இப்பணத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே உள்ளே ஆவின் பாலகத்தில் அவர் வாங்கி சென்ற நிலையில் அனைத்தும் வீடியோ படம்பிடிக்கப்பட்டு வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகின்றது.

"லஞ்சம் கேட்கிறாங்க என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கூறினேன். இவ்வளவு சின்னத் தொகைக்கெல்லாம் நாங்க வரமுடியாதுன்னு கூறிட்டாங்க கோவில்பட்டியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் சான்றிதழ் பெற ஒவ்வொரு சான்றிதழுக்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இதனை வெளிப்படுத்தத் தான் இந்த வீடியோ யோசனையை கையிலெடுத்து வாட்ஸ் ஆப்பிள் விட்டேன்" என்றார் மாரிமுத்து. இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Nellai Lok Sabha Constituency Announcement of Congress candidate for the by elections!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார். 

Next Story

தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு; உடனடியாக பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) வெளியிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி -  பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர்  ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  த.மா.காவுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட இருப்பதால், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.