Skip to main content

மழைக்கு இறந்த ஆடுகள்- துக்கம் விசாரிக்க வந்த மந்திரி

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

கோடை வெயில் மண்டையை பிளக்கிறது. வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் 100 லிட்டர் மோர் விற்பனையே 12 மணிக்கே முடிந்துவிடும் அளவுக்கு மக்கள் தாகத்தை தணிக்க பெரும் முயற்சி எடுக்கின்றனர். இந்த வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது. சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான, மிதமான காற்றுடன் மழை பெய்தது. 

 

The dead sheep in the rain - the minister who came to inquire about sadness

 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகர சுற்றுவட்டார பகுதிகளில் ஏப்ரல் 30ந்தேதி இரவு, திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் காற்றில் முறிந்து விழுந்துன. ஆம்பூர் ஆயிஷாபி நகர், பிலால் நகர், புதுமனை ஆகிய பகுதிகளில் 8க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை, அங்குள்ள ஒரு பள்ளிவாசல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் மின் கம்பிங்கள் சாய்ந்ததால் மின்சாரம் தடை செய்யப்பட்டது. ஆம்பூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையின் போது ரயில் நிலையம் அருகே உள்ள மரக்கிளைகள் உடைந்து சாலை அருகே விழுந்தது. தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் இருந்த உயர் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்ததால் வாகனங்கள் செல்லாமல் நின்றன. 

 

The dead sheep in the rain - the minister who came to inquire about sadness

 

இதனால் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து நின்றது. தகவலறிந்து வந்த மின்சார துறையினர் மற்றும் ஆம்பூர் போலீசார், மின் இணைப்பு துண்டித்து பொதுமக்கள் உதவியுடன் மின்கம்பிகளை அகற்றினர். பின்னர் போக்குவரத்து தொடங்கியது. அதேப்போல், வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு கிராமத்தில் ஜானகி என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்கொட்டகையில் 20 ஆடுகள் அடைத்து வைத்திருந்தார். மழையினால் ஆட்டு ஆட்டுக்கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த 8 ஆடுகள் பலியானது.

 

The dead sheep in the rain - the minister who came to inquire about sadness

 

இதுப்பற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல், வட்டாச்சியர் முருகன் சேதமடைந்த பகுதிகைள பார்வையிட்டனர். ஆட்டு கொட்டகை விழுந்து பலியான ஆடுகளின் உரிமையாளர் ஜானகியை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறினார்கள்.

 

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாததால் மக்களிடம் நல்ல பெயர் வாங்கி தேர்தலின்போது வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் நிலோபர் ஆறுதல் கூற வந்துள்ளார் என அங்கிருந்த மக்கள் முணுமுணுத்தனர். இதற்கு முன்பு இதுப்போல் மழைக்காலங்களில் பெரும் துன்பத்தை மக்கள் அனுபவித்தபோது வீட்டை விட்டு வெளியே வராதவர் தான் இந்த அமைச்சர் என்கிறார்கள் இன்னும் சிலர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்