Skip to main content

தாய் இறந்தது தெரியாமல் தேர்வு எழுதிய மகள்கள்... தந்தையின் சாமர்த்தியமான முடிவால் நெகிழும் கிராம மக்கள்!!

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Daughters who wrote the exam without knowing the mother  ... Father's clever tolerance!

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் காந்தி நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி முத்துமாரி பெரியசாமி நகரிலுள்ள கேஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர். முத்துமாரியோ ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர்களுக்கு வாணிஸ்ரீ (15), கலா ராணி (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை முத்துமாரி புதிய பேருந்து நிலையம் அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஆடுகள் கலைந்து ஒட, அதனைப் பிடிப்பதற்காக முத்துமாரி சென்றபோது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. படுகாயம் காரணமாக முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

விபத்து குறித்து சங்கரன்கோவில் எழில் நகரைச் சேர்ந்த சண்முகசாமி என்பவரிடம் சங்கரன்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே இறந்த முத்துமாரியின் மகள்களான வாணிஸ்ரீக்கும், கலாராணிக்கும் அன்றைய தினம் கணிதம் பொதுத்தேர்வு இருந்ததால் பெரியசாமி தன் மகன்களிடம், தாய், விபத்தில் இறந்ததைக் கூறினால் அவர்களின் மனம் பாதிக்குமே என்ற பதைபதைப்பில் அதனைக் கூறாமல் கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியவர் அவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

 

Daughters who wrote the exam without knowing the mother  ... Father's clever tolerance!

 

பெற்ற தாய் இறந்தது தெரியாமலேயே மகள்கள் இருவரும் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்தச் சூழலில் பிரேதப் பரிசோதனை முடிந்த முத்துமாரியின் உடல் மதியம் ஒரு மணிக்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகே தேர்வு எழுதி முடித்து விட்டு வந்த மகள்களிடம் தாய் இறந்த தகவலை பெரியசாமி கூறியிருக்கிறார். கதறிய இரண்டு மகள்களும் மயானத்திற்குச் சென்று தாயின் உடலைப் பார்த்து கதறி அழுதிருக்கிறார்கள். பிள்ளைகள் அழுத சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதைப் பாரமாக்கியது.

 

மனைவி இறந்த நிலையில் மகள்களின் கல்விக்காக தந்தை செய்த அந்த சாமர்த்தியமான முடிவு, அந்தப் பகுதி மக்களை நெகிழ வைத்திருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

யு.பி.எஸ்.சி. போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
UPSC Attention Candidates

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2024) யு.பி.எஸ்.சி. குடிமைப் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இதனையடுத்து போட்டித் தேர்வர்கள் கடந்த 6 ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான முதல்நிலை தேர்வு வருகிற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் காரணமாக சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் இந்திய வனப் பணி தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசுப் பணியாளர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி மே 26 அன்று நடக்க இருந்த குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.