Skip to main content

கணவனின் தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மருமகள்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

Daughter in law arrested in Mother in law case

 

கடலூர் மாவட்டம், சேத்தியாதோப்பு அருகில் உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சிந்தாமணி(65). இவரது இளைய மகன் வேல்முருகன்(37). இவருக்கும் இவரது சகோதரியின் மகள் சங்கீதா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.  இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா, தனியாக வசித்து வந்தார். 

 

இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு வேல்முருகன் தனது உறவினர்கள் சிலரை அழைத்துச் சென்று சங்கீதாவிடம் சமாதானம் பேசி தன்னுடன் வாழ்வதற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அதன் பிற்கு சங்கீதா வீட்டில் அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை சங்கீதாவின் பாட்டியும் வேல்முருகனின் தாயாருமான சிந்தாமணி கண்டித்து வந்துள்ளார். இதனால் மாமியார் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தனக்கும் கணவர் வேல்முருகனுக்கும் இடையே மாமியார் சிந்தாமணியால் சண்டை வருகிறது என அவர் மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். 

 

நேற்று முன்தினம் இரவு சிந்தாமணி வீட்டுக்குள் சென்று டீ சாப்பிடுவதற்காக பால் பாக்கெட் எடுத்துள்ளார். அப்போது சங்கீதா ஏற்கனவே தயார் நிலையில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மாமியார் சிந்தாமணி மீது ஊற்றி தீ வைத்து விட்டு கதவை வெளிப்பக்கம் பூட்டி விட்டார். சிந்தாமணி போட்ட அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர். அங்கே சிந்தாமணி உடலில் தீப்பற்றிய நிலையில் துடித்துள்ளார். உடனடியாக தீயை அனைத்து சிந்தாமணியை தீக்காயங்களுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையல் சிந்தாமணி சிதம்பரம் மாஜிஸ்திரேட் சக்திவேலிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் மருமகள் சங்கீதா தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். உடனடியாக வழக்குப் பதிவு செய்த சேத்தியாத்தோப்பு போலீசார் சங்கீதாவை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.