Datsinamoorthy sentenced to 10 years in prison for girl child case

Advertisment

சென்னை பெசன்ட்நகர் திடீர்நகரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 45). கடந்த 2016-ஆம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த 8 வயது சிறுமியை தட்சிணாமூர்த்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், அடையாறு மகளிர் போலீசார் வழக்குப பதிவு செய்து தட்சிணாமூர்த்தியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த,குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, தட்சிணாமூர்த்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு கூறினார்.