சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் இந்த பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த தவறினால் 2022 பிப்ரவரி 27ம் தேதி சசிகலா விடுதலை ஆவார் எனவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல் பரோல் வசதியை பயன்படுத்தினால் சசிகலா விடுதலையாகும் தேதியில் மாற்றம் ஏற்படும் எனவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.