Skip to main content

''எம் மகன் மாதிரிப்பா நீ...''- மின் கோபுரத்தில் ஏறிய இளைஞரை நைசாக பேசி தரையிறக்கிய தாசில்தார்..!!!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

"ஊரெல்லாம் பிரச்சனையாக இருக்கு.. அது தெரியாமல் இங்க வந்து உட்காந்துருக்கே.. உன்னிடம் யார் என்ன பிரச்சனை செய்தாலும் சொல்லு..! அம்மா நான் இருக்கேன்ல.. தீர்த்து வைக்கின்றேன்பா." என நைச்சியமாக பேசி, தற்கொலைக்காக மின் கோபுரத்தில் மூன்றரை மணி நேரமாக ஏறி அமர்ந்திருந்த இளைஞரை தரையிறக்கியுள்ளார் தாசில்தார் ஒருவர்.


 

 

Dasildar, the son of a young man who climbed the tower


நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஜீவா, சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகிலுள்ள திருப்பதி நகரில், முத்துலெட்சுமி என்பவருடன் வசித்து வருகின்றார். முத்துலெட்சுமிக்கு முன்னரே திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், அவரை மறுமணம் செய்து வாழும் ஜீவா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தினை நடத்தி வந்துள்ளார். கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த நிலையில், நேற்று அதிகாலையிலேயே சிவகங்கைக்கு, வேலைக்கு செல்வதாகக்கூறி சென்றவர் மாலையில் குடிபோதையுடன் வீடு திரும்பியிருக்கின்றார். இதனால் கணவன், மனைவிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் இதனைக் கண்டித்திருக்கின்றார்கள். இதனால் கோபமடைந்த ஜீவா அருகிலுள்ள மின்கோபுரத்தில் ஏறி உச்சிக்கே சென்றவர், "பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்யாவிடில் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டலை" தொடர்ந்திருக்கின்றார்.
 

nakkheeran app



உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மதகுப்பட்டி எஸ்.ஐ. ரஞ்சித் உள்ளிட்ட போலீசார், சிவகங்கை தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்திருக்கின்றனர். உடனடியாக பலனளிக்காத நிலையில், தாசில்தார் மைலாவதியோ, "ஏம்பா..! நான் உன்னுடைய அம்மா மாதிரி.. நீயும் எம்புள்ளை மாதிரி தான் இருக்கிற.. உன்னைய தொந்தரவு செய்தவர்களை கூறு, உடனடியாக அம்மா ஆக்ஷன் எடுக்கின்றேன்." என நைச்சியமாக பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார். ஜீவாவும் கீழே இறங்க ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஜீவாவை மீட்ட தீயணைப்புத்துறையினர் 108 வாகனம் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் இணைப்பு துண்டிப்புக் காரணமாக திருக்கோஷ்டியூர், கண்ட்ரமாணிக்கம்,  நாட்டரசன்கோட்டை மற்றும் காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூன்றரை மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஜீவாவிற்கு ஊரடங்கு நிலையில் மது கிடைத்தது எப்படி.? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'பிரதான தொழில் திமுகவால் நசிந்து நலிந்து வருகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
'The main industry is being destroyed by DMK'-Edappadi Palaniswami's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நாமக்கலில் அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். கூட்டத்தில்  அவர் பேசுகையில், ''கைத்தொழில் நெசவாளர்கள் பாதிப்பாகாத வகையில் பார்த்துக் கொண்ட அரசு அதிமுக .அரசு ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பலர் கைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். சங்ககிரி, திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதிகளில் நன்கு அறிமுகமானவன் நான். எல்லா இடத்திற்கும் நான் சென்று வந்திருக்கின்றேன். இந்த விசைத்தறி தொழில் ஒரு பிரதான தொழிலாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான பேர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்றைக்கு அந்தத் தொழில் எல்லாம் நசுங்கி நலிவடைந்து வருகிறது. இந்தத் தொழில் சிறக்க ஏதாவது இந்த அரசு நடவடிக்கை வேண்டும் என குரல் கொடுத்தால், திமுக அரசு எதையுமே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. விலையில்லா வேட்டி, சேலைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் உரிய நேரத்தில் இந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஆர்டர் கொடுத்தோம். இதனால் அந்தத் தொழில் பாதுகாக்கப்பட்டது. ஆனால் 2021 சரியான ஆர்டர் கொடுக்கவில்லை. அதனால் வேலை வாய்ப்பை இழந்தார்கள். 2024ல் தரமான நூல் கொடுக்கவில்லை. அதனால் இப்பொழுது தொழில் சரிவை கண்டுள்ளது. ஆகவே அதிமுக ஆட்சி உங்கள் ஆதரவோடு மீண்டும் மலரும். அப்பொழுது இந்தத் தொழில் செழிக்கும். திமுகவின் பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் வரை இப்படித்தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் வர வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக கட்சிக்கு வர வேண்டும். அப்பொழுதுதான் ஏழைகள் இல்லை என்ற சொல்லை உருவாக்க முடியும்''என்றார்.