Skip to main content

சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்கள்... தலைமறைவானவர்களைத் தேடும் காவல்துறையினர்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

Damaged maize crops ... Police search for missing persons

 

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ளது தச்சூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன்(85). இவர் தனக்குச் சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். நேற்று காலை மக்காச்சோள பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்காகத் தகுந்த ஏற்பாடுகள் செய்வதற்காக நிலத்திற்குச் சென்றார். அவர்கள் நிலத்தில் விளைந்திருந்த மக்காச் சோளப் பயிர்கள் சேதம் அடைந்து கிடந்தது. விளைந்த பயிர்களை யாரோ டிராக்டர் மூலம் உழுது நாசம் செய்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வரதராஜன் ராமநத்தம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்தனர். மக்காச்சோளம் விளையும்போது வரதராஜனின் தம்பி, வரதராஜனிடம் நிலத்தில் பங்கு கேட்டு தகராறு செய்துள்ளார். இது சம்பந்தமாக ராமநத்தம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு போலீஸார் தர்மாவை அழைத்துக் கண்டித்து அளித்துள்ளனர். இது தொடர்பாக அவர்களிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அந்த முன்விரோதம் காரணமாகத் தர்மா அவரது மனைவி அருந்தவம் இவர்களது மகன் அசோக் ஆகிய மூவரும் ஒரு டிராக்டர் மூலம் வரதராஜன் பயிர் செய்திருந்த சோளத்தை உழுது அழித்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தர்மா மகன் அசோக்கை கைது செய்துள்ளனர். தர்மா அவரது மனைவி அருந்தவும் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.