Skip to main content

தலித் பெண் ஊராட்சித் தலைவர் விவகாரம்; சி.பி.எம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

Dalit woman panchayat leader issue; C.P.M. cuddalore

 

புவனகிரி அருகே தெற்குத் திட்டை தலித் பெண் ஊராட்சி மன்றத் தலைவரை தலித் என்பதால் தரையில் உட்கார வைத்து நடத்தப்பட்ட சாதிய ஆதிக்க வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கற்பனைச் செல்வம், சதானந்தம், ராஜா, வாஞ்சிநாதன், மூர்த்தி, முத்து, கிருஷ்ணன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் மேரி, சிதம்பரம் நகர தலைவர் அமுதா, செயலாளர் மல்லிகா, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குமரவேல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தெற்குத் திட்டை சம்பவத்தைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். 

 

மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி துணைத் தலைவரை விரைவில் கைது செய்ய வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்து ஊராட்சித் தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அதிகாரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களையும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், தெற்குத் திட்டை மட்டுமல்ல தமிழகத்தின் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற சாதிய வன்கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனையொட்டி கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இது சாதிய பாகுபாடு உள்ளானவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட தோல்வி என்றார். 

 

Ad

 

இதற்கென்று தனியாக சமூகநீதி பிரிவு ஏ.டி.ஜி.பி உள்ளார். அவர் என்ன வேலை செய்கிறார் என்று தெரியவில்லை எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தலித் ஊராட்சித் தலைவர்கள் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆய்வு செய்து தமிழக அரசின் முகத்திரையைக் கிழிக்கும் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.