Skip to main content

ஆதியன் மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கிய சிக்கல் கூட்டுறவு சங்க தலைவர்

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
dairy cows - Sikkal Co-operative Society President - Nagapattinam

 

கரோனா பல குடும்பங்களையும் கலைஞர்களையும் வீதிக்கு கொண்டுவந்துள்ளது. அப்படி வாழ்வின்றி நிர்கதியாக நின்ற பூம் பூம் மாட்டுக்காரர்கள் என்று அழைக்கப்படும் ஆதியன் சமுதாய பழங்குடி மக்களுக்கு கறவை மாடுகளை வழங்கி அவர்களின் குடும்பங்களையும் மிளிர செய்திருக்கிறார் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் தங்க.கதிரவன்.

 

cow

 

நாகப்பட்டினம் நகரத்திற்கு மிக அருகில்  உள்ள செல்லூர் கிராம சுனாமிக்குடியிருப்பில் ஆதியன் சமூகத்து மக்கள் வசித்து வருகிறார்கள். ஆதி இசைக் கலைஞர்களும், நல்வாக்கு சொல்பவர்களுமான அவர்கள் அந்த தொழில் நலிவுற்று இன்று வாழ்வாதாரம் இல்லாமல் பிளாஸ்டிக் வியாபாரம் செய்தல், யாசகம் பெறுதல், வளையல், பாசிமணி விற்றல், பழைய துணிகளை வாங்கி விற்றல் என பெரும் துன்ப நிலையில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் துயர நிலையை உற்று கவனித்து அவர்களை அந்த துயரநிலையிலிருந்து மீட்கும் எண்ணத்தை மனதில் நிறுத்தி இப்போது அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்விதமாக அவர்களுக்கு கறவை மாடுகளை வாங்கிகொடுத்துள்ளார் தங்க.கதிரவன்.

 

பூம் பூம் மாட்டுக்காரர்களாக அவர்கள் வாழ்ந்திருந்தாலும் தற்போது அவர்களிடம் ஆசையாகக்கூட கால்நடைகள் இல்லாத நிலையிலேயே இருந்தனர். கறவை மாடுகளை வாங்கிய சந்தோஷத்தோடு அவர்கள் கூறுகையில், "ஒரு காலத்தில் எங்க முன்னோர்கள் பசுமாட்டோடு மேளம் வாசித்து மக்களை மகிழ்விப்பார்கள், வாக்கு சொல்லியும் வந்தார்கள், ஆனால் இன்று எங்களிடம் பெயருக்குக்கூட ஒரு மாடு கிடையாது. அந்த தொழிலையும் மறந்துவிட்டோம், நாங்கள் தினசரி குடும்பத்தை நகர்த்த பட்டபாடு வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. இன்று அண்ணன் தங்க.கதிரவனின் பெரும் முயற்சியால் எங்களுக்கு மாடு கிடைத்துள்ளது, வருமாணத்துடன் அந்த கடனை அடைக்கவும் வழி செய்து கொடுத்துள்ளார், அவருக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளோம்" என்று ஆனந்த கண்ணீர் விடுகிறார்கள்.

 

dairy cows - Sikkal Co-operative Society President - Nagapattinam

 

இந்த மக்களுக்கு கறவை மாடுகள் கிடைக்க முயற்சித்த வானவில் தொண்டுநிறுவனத்தின் ரேவதியோ, "அந்த மக்களின் வாழ்வியல் முற்றிலுமாக கவலை நிலையில் இருந்ததை நன்கு உணர்ந்தேன். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என நினைத்து தங்க.கதிரவனிடம் கூறினேன், அவர் மனமகிழ்வோடு செய்து கொடுத்துள்ளார்" என்கிறார்.

 

ஆதியன் மக்களுக்கு கறவை மாடுகள் கிடைக்க வழிவகை செய்த சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் தங்க.கதிரவனோ," சிக்கல் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தின் மூலமாக அந்த மக்களுக்கு கறவை மாடுகளை வாங்கித்தந்துள்ளோம். பதினைந்து குடும்பங்களில் முதல் கட்டமாக ஆறு கறவை பசு மாடுகள் வழங்கியுள்ளோம். விரைவில் மீதமுள்ளவர்களுக்கும் கறவை மாடுகள் வாங்கிக்கொடுக்க இருக்கிறோம். பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமாகவும் பதிவு செய்யப்பட்டு பால் விற்பனை மையமும் அங்கு அமைக்கப்பட உள்ளது.

 

dairy cows - Sikkal Co-operative Society President - Nagapattinam

 

கஷ்ட ரேகைகள் நிறைந்த  அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியும் சிரிப்பும்,  கண்களில் நம்பிக்கையும் காணமுடிந்தது. அந்த மக்கள் தங்களது புதிய பயணத்தை நிலையான வாழ்வாதாரம் எனும் மாபெரும் இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இந்த முயற்சி பல்கிப்பெருகி பல இடங்களிலும் இருக்கும் பூம் பூம் மாட்டுக்காரர் ஆதியன் சமூகத்துக்கு மாற்று வாழ்வினை உருவாக்கும் என எதிர்பார்க்கிறேன். என் பொதுவாழ்வில் இந்த நாளை மிகச்சிறப்பான நாளாக நினைத்து மகிழ்கிறேன்" என்கிறார் அவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.