ADVERTISEMENT

குடும்பத்தினர் பிரிந்த விரக்தியில் தற்கொலை; கட்டிடத் தொழிலாளியின் சோக முடிவு!

02:01 PM Jul 30, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிவகாசி – விஸ்வநத்தத்தில் வசித்த கட்டட சித்தாள் வேலை பார்த்துவந்த காளிராஜுக்கு 39 வயதுதான் ஆகிறது. இவரது மனைவியும், மகள்கள் இருவரும் 4 வருடங்களுக்கு முன்பே, காளிராஜுவை விட்டுப் பிரிந்துசென்று தனியாக வாழ்ந்து வருகின்றனர். தனக்கென்று ஒரு குடும்பம் இருந்தும், உடனிருந்து வாழமுடியாதது, காளிராஜை விரக்தியில் தள்ளியது. இதற்கொரு தீர்வுகாண முடியாத நிலையில், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துவிட்டு, விஸ்வநத்தம் – வெற்றிலையூரணி சாலையில் கிடந்தார்.

இதனையறிந்த காளிராஜுவின் தம்பி கணேசன், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, சிகிச்சை பலனின்றி காளிராஜ் உயிரிழந்தார். அண்ணன் காளிராஜ் இறப்பு குறித்து தம்பி கணேசன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுண் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT