Skip to main content

கூலித்தொழிலாளி கழுத்தறுத்து கொலை; ராசிபுரத்தில் பரபரப்பு

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

daily wages employee incident in rasipuram police investigation

 

ராசிபுரம் அருகே, கூலித்தொழிலாளியைக் கழுத்தறுத்துக் கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வெங்கடசாமி தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 26). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. சுகன்யாவும் கூலி வேலைக்குச் சென்று வருகிறார். 

 

வேலைக்குச் செல்லும்போது குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். கணவன், மனைவி இருவரும் வெள்ளிக்கிழமை(மே 13) வழக்கம்போல் வேலைக்குச் சென்றனர். அன்று இரவு, ஈஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் இரவு 08.00 மணியளவில் வீட்டுக்குச் சென்றார். இரவு 09.00 மணியளவில் சுகன்யாவும் குழந்தையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

 

அப்போது வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் ஈஸ்வரன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா, கதறித் துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

 

இதுகுறித்து அவர்கள் ராசிபுரம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முன்விரோதம் காரணமாக ஈஸ்வரன் கொல்லப்பட்டாரா அல்லது மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சம்பவத்தன்று அவரைக் கடைசியாக பார்த்த நபர்கள் யார் யார்?, அவருடைய நண்பர்கள் யார், செல்போனில் கடைசியாக அவர் யார் யாரிடம் பேசினார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

 

ஓரிரு நாட்களில் கொலையாளியைக் கண்டுபிடித்து விடுவோம் என காவல்துறையினர் கூறினர். இந்தச் சம்பவம் ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.