Advertisment

அமைச்சர் ஆகிறார் டி.ஆர்.பி.ராஜா

D. R. P. Raja becomes the minister

Advertisment

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பி ராஜா அமைச்சராக பதவி ஏற்கிறார்.

Advertisment

அமைச்சரவையில் மாற்றம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் தற்போது அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாசருக்கு பதில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். டி.ஆர்.பி.ராஜாவிற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் வரும் 11 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டாண்டுகள் ஆகும் நிலையில் அமைச்சர்களுக்கான துறைகள் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். தற்போது அடுத்ததாக டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

mannarkudi minister
இதையும் படியுங்கள்
Subscribe