சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (22/10/2021) காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இந்தியாவிற்கான செக் நாட்டுத்தூதர் மிலன் ஹோவோர்கா மற்றும் செக் நாட்டுக் கௌரவ தூதர் அருண் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பொதுத்துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.