Skip to main content

கிராமங்களிலும் வீடுகளுக்கே சென்று சிலிண்டர் டெலிவரி... இல்லையேல் அங்கீகாரம் ரத்து...

Published on 19/04/2020 | Edited on 20/04/2020

 

இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் பெட்ரோல் பங்க்குகள், கேஸ் ஏஜென்சிகள் இயங்க எந்தத் தடையும் கிடையாது. அவைகள் சமூக இடைவெளியுடன் இயங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி இவைகள் இயங்கி வருகின்றன. ஊரடங்குக்கு முன்பு கேஸ் வேண்டும் என்பவர்கள் நிறுவனத்தின் தானியாங்கி மொபைல் எண், ஏஜென்சிஸின் தொடர்பு எண் அல்லது இணையத்தில் பதிவு செய்தால் கேஸ் வீடு தேடிவரும். மாநகரம், நகரங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகக் கொண்டு வந்து தந்துவிட்டு பணம் வாங்கிச் செல்வார்கள் ஏஜென்ஸியின் டெலிவரி பாய்கள். கிராமப் பகுதியாக இருந்தால் ஊரின் ஒதுக்குபுறமான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாடிக்கையாளரை வந்து வாங்கிக் கொள்ளுங்கள் எனச் சொல்லி தந்து அனுப்புவார்கள்.
 

 

Delivery


கேஸ் நிறுவனங்களின் சட்ட விதிகளின் படி, ஏஜென்ஸிகள் வாடிக்கையாளரின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று கேஸ் சிலிண்டரை இறக்கி வைத்து அதன் எடையை வாடிக்கையாளருக்கு காட்டிவிட்டு, அதன்பின் அன்றைய மதிப்பில் கேஸ் விலையை வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்கிறது. 99 சதவிதம் அப்படி எந்த கேஸ் ஏஜென்ஸி ஊழியரும் எங்கும் செய்வதில்லை. அதோடு டெலிவரி சார்ஜ் எனத் தனியாக 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூல் செய்வதும் வாடிக்கை. இப்படியொரு தொகையை வசூலிக்கக் கூடாது என நிறுவனங்கள் அறிவித்தும் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் வசூலித்துவருகின்றன.


திருவண்ணாமலை மாவட்டத்தில் 20-க்கும் அதிகமான கேஸ் ஏஜென்ஸிகள் உள்ளன. திருவண்ணாமலை நகரத்தில் உள்ள ராஜிவ் கேஸ் ஏஜென்ஸி, லட்சுமி கேஸ் ஏஜென்ஸி, யோகலட்சுமி கேஸ் ஏஜென்ஸி எனச் சில ஏஜென்ஸிகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு பின்பு நிறுவனங்கள் தானியாங்கு கேஸ் பதிவு மொபைல் எண்ணை முடக்கியுள்ளன. இணையம் மற்றும் செல்போன் வழியாகப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் சம்மந்தப்பட்ட ஏஜென்ஸிகளுக்கு வாடிக்கயைாளர்கள் போன் செய்தாலும் போன்களை யாரும் எடுப்பதில்லை. இதனால் கிராமபுற, நகர்புற வாடிக்கையாளர்கள் இந்த 144 தடையுத்தரவு காலத்தில் காலி சிலிண்டரை எடுத்துக்கொண்டு ஏஜென்ஸிகளுக்கு வருகிறார்கள். அப்படி வரும் இடத்திலும் சமூக இடைவெளியை இந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்க வைப்பதில்லை. அதோடு, உங்க ஏரியாவுக்கே சிலிண்டர் வண்டிகள் வரும் அங்கே வாங்கிக்குங்க எனத் துரத்துகின்றன. வாரத்துக்கு ஒருமுறை அல்லது 10 தினங்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு ஏரியாவுக்கும் செல்லும் சிலிண்டர் வண்டிகள், சிலிண்டரை விற்பனை செய்கின்றன. அங்கு சிலிண்டர் வாங்க தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. 
 

http://onelink.to/nknapp

 

இதுக்குறித்த புகார்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமியின் கவனத்துக்குச் சென்றன. அதனைத் தொடர்ந்து அவர் விதித்துள்ள உத்தரவில், கேஸ் ஏஜென்ஸிகள் நகரம், கிராமம் எதுவாக இருந்தாலும் வாடிக்கையாளரின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்ய வேண்டும். கிராமம் தானே என ஏதாவது ஒரு மூலையில் வைத்து மக்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்வதாகத் தகவல் கிடைத்தால் விசாரணை நடத்தி அது உண்மை எனத் தெரியும் பட்சத்தில் அந்த கேஸ் ஏஜென்ஸியின் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏஜென்ஸியின் லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார்.


ஊரடங்கால் பொருளாதார ரீதியாக மக்கள் மிகவும் மோசமாக உள்ள நிலையில் இப்போதும் சிலிண்டர் டெலிவரிக்கு "30 ரூபாய் தா, 50 ரூபாய் தா" என கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர். இதுப்பற்றி சம்மந்தப்பட்ட ஏஜென்ஸியிடம் புகார் சொல்ல போன் செய்தாலும் யாரும் எடுப்பதில்லை, நேரடியாகச் சென்று புகார் கூறினால் நீங்க இருக்கற ஊருக்கே கொண்டு வந்து தர்றோமே அதுக்கான வண்டி வாடகை எனப் பதில் சொல்கின்றனர்.

நிறுவனங்களோ, கேஸ் சிலிண்டர் விலையோடு வண்டி வாடகையும் அடக்கம், பில்லில் உள்ள தொகையை மட்டும் தாருங்கள், ஏஜென்ஸிகள் அதனை மட்டும் வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதனை மீறிச் செயல்படுகிறார்கள். இந்த நேரத்திலாவது இப்படி கூடுதல் தொகை வாங்குவதைத் தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் பொதுமக்களிடம் இருந்து எழுந்துள்ளது.  
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.