Cyclone warning cage hoisted in Tuticorin

Advertisment

திரிகோணமலைக்கு 455 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில் ஒன்றாம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன் பிடிக்கச் சொல்லாததால் சுமார் 2 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் என அனுமானிக்கப்பட்டுள்ளது.