Skip to main content

சைபர் க்ரைம்; விவசாயியின் ஒரு லட்சத்தை மீட்ட காவல்துறை! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Cyber ​​crime; Police rescue farmer's one lakh

 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயாத்துரை மகன் பாலசுப்ரமணியன். இவருடைய செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க சம்மதம் தெரிவித்தால் அதற்கு அட்வான்ஸ் தொகையாக 20 லட்சமும் மாத வாடகை 25,000 ரூபாயும் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 


அதை நம்பிய பாலசுப்பிரமணியன், அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 1,14,999 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகும் அவர்கள் பாலசுப்பிரமணியனிடம் மேலும் மேலும் பணம் கேட்டுள்ளனர். அப்போது அவர், ‘என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. எனவே என்னிடத்தில் தங்கள் செல்போன் டவர் அமைக்க வேண்டாம். நான் செலுத்திய பணத்தை திருப்பித் தாருங்கள்’ என்று கேட்டுள்ளார். 


அதன் பிறகு அவர்கள் எந்த தகவலும் தராமல் பாலசுப்பிரமணியன் போனைத் துண்டித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தார். உடனடியாக அவர், விழுப்புரத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கூடுதல் எஸ்.பி கோவிந்தராஜன் மற்றும் போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து வங்கி அதிகாரிகளின் துணையோடு உடனடியாக அந்த வங்கிக் கணக்கு முடக்கம் செய்தனர். அதன் பிறகு வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பாலசுப்பிரமணியம் செலுத்திய 1,14,999 பணத்தை மீட்டு அவரது கணக்கில் வரவு வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பாராட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.