Skip to main content

ஆன்லைன் மோசடியில் பெண் பறிகொடுத்த பணம் மீட்பு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

cyber crime Police recovered money stolen woman online fraud

 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு(26). படித்த பட்டதாரியான இவர் இணையதளத்தில் வேலை தேடி உள்ளார். அதில் வீட்டிலிருந்து வேலை செய்வது குறித்து ஒரு இணையதளத்தில் பதிவும் செய்துள்ளார். அஞ்சுவின் இணையதள முகவரியை தொடர்பு கொண்டவர்கள், கடந்த மே மாதம் 5ஆம் தேதி அவர் செல்போனுக்கு பேசியுள்ளனர். அப்போது அஞ்சுவிற்கு வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளம் வழங்கப்பட்டுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியபடி அதன் மூலம் வருவாய் ஈட்டுவதற்காக முன்பணமாக பல்வேறு தவணைகளில் ரூ. 2 லட்சத்தை கூகுள் பே மூலம் அஞ்சுவிடமிருந்து பெற்றுள்ளனர். ஆனால் இவர் வேலை செய்வதற்கான சம்பளம் தரப்படவில்லை. இவர் முன்பணமாக கட்டிய ரூ. 2 லட்சம் பணத்தையும் திருப்பி தரவில்லை.

 

இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஞ்சு,  விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இவரது புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இணைய விசாரணை மூலம் அஞ்சு பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை முடக்கம் செய்து, அதிலிருந்து  ரூ.2 லட்சம் பணத்தை மீட்டனர். பின்னர் அந்தப் பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் க்ரைம் பிரிவு போலீசார் அஞ்சுவை நேரில் அலுவலகத்திற்கு வரவழைத்து அவரது பணத்தை  அவரிடம் ஒப்படைத்தனர். மோசடியில் பறிகொடுத்த பணத்தை கடும் முயற்சி செய்து மீட்டுக் கொடுத்த சைபர் க்ரைம் பிரிவு போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

பொது இடங்களில் சார்ஜ் போடுபவர்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Cybercrime alert For those charging in public places

பொதுமக்கள் தேவைக்காக, ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிலும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்காக பொது இடங்களில் வைக்கப்படும் யூஎஸ்பி போர்டுகள் மூலம் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போடுவதை வழக்கமாக கொண்டு உபயோகித்து வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் பல சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, ‘பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம், மக்கள் தங்களுடைய செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம். அவ்வாறு பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. 

இந்த யு.எஸ்.பி போர்டுகளில், மோசடி கும்பல் யு.எஸ்.பி போர்ட் போன்ற கேட்ஜெட்டை மறைமுகமாக பயன்படுத்தி செல்போனில் உள்ள அனைத்து தரவுகளையும் திருட வாய்ப்பு உள்ளது. அதனால், மக்கள் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், பொது இடங்களில் செல்போன்களை சார்ஜ் செய்யும் போது கவனமாக போட வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.