Skip to main content

மன்னார்குடியில் வரதட்சணை வாங்கிவராத பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

திருவாரூரில் வரதட்சணைகேட்டு மனைவியையும், குழந்தையையும் அரிவாளால் வெட்டி மண்ணெணெய் ஊற்றி கொல்ல முயற்சித்த கணவனிடமிருந்து தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தது பலரையும் கலங்கடித்துள்ளது.

 

dowry

 

திருவாரூர் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா(28). இவர் காட்டூர் என்ற இடத்தில் கார் பரிசோதனை மையம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டும் மன்னார்குடி பைங்காநாடு கிராமத்தை சோ்ந்த ஜெயநந்தினிக்கும் (24) திருமணம் நடைபெற்று 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

 

 

இந்நிலையில் ஜெயநந்தினியை அவரது கணவர் கிஷோர்ராஜா மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனையடுத்து ஜெயநந்தினி பணம் பெறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்தை ஊருக்கு சென்று நேற்று திரும்பி உள்ளார். அவரிடம் கணவனும், மாமியார், மாமனார், நாத்தனார், பணம்  வாங்கிட்டு வந்தாயா என கேட்டுள்ளனர். பணமில்லை என ஜெயநந்தினி நடுங்கிய குரலில் கூற தகாராறு ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் கணவன் கிஷோர்ராஜாவும் தாயார் ராணியும் அரிவாளை கொண்டு ஜெயநந்தினியை வெட்டியுள்ளார். அதோடு கிஷோர்ராஜா குடும்பத்தினர் ஜெயநந்தினி மீதும் குழந்தை மீதும் மண்ணெணெய் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பி காயங்களுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தானே அனுமதியாகி உள்ளார்.

 

 

இந்த சம்பவம் குறித்து அறிந்த நகர காவல்துறையினர் மருத்துவக்கல்லூரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் ஜெயநந்தினியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சனைக்காக தன்னை கொல்ல முயன்றதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்துவிட்டதாகவும் ஜெயநந்தினி செய்தியாளர்களிடம் தொிவித்துள்ளார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் வரதட்சணை கேட்டு கொல்ல முயற்சி நடைபெற்ற சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

உ.பி.யில் பரபரப்பு; ஆஸ்கர் விருது பெற்ற சிறுமியின் வீடு இடிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Oscar winner Pinki house demolished

 

உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது. 

 

அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர். 

 

இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர்  கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன்  தெரிவித்திருக்கிறார்.