Skip to main content

தைலமர காட்டை ஒட்டு மொத்தமாக வெட்டி அழித்த விவசாயிக்கு வரவேற்பு!

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்து வறட்சியை ஏற்படுத்தும் தனது 2 ஏக்கர் தைலமரக்காட்டை விவசாயி கணேசன் அழித்துள்ளார். நெடுவாசலில் ஒரு விவசாயி தைல மரக்காட்டை அழித்து குருங்காடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதற்கு வரவேற்புகள் கூடி வருகிறது

புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகமான வறட்சியை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் மாவட்டத்தில் இருந்த பெரும்பாண்மையாக இருந்த காப்புக்காடுகளை அழித்துவிட்டு தைலமரக்காடுகளையும், சீமைக்கருவேல மரங்களையும் வளர்த்ததே காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. அதனால் வனத்துறை மூலம் வளர்க்கப்படும் பெரும்பாண்மையான தைல மரக்காடுகளை அழித்துவிட்டு பழைய முறையில் காப்புக்காடுகளை வளர்த்தால் வறட்சியை போக்குவதுடன் அழிந்து வரும் வன விலங்குகள், பறவைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

cut down the entire  Eucalyptus trees in pudukottai;compliment to the farmer


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் திருவரங்குளம் ஒன்றியத்தில் வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டதால் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில் மேலும் ரூ.10 லட்சம் வரை செலவு செய்து ஆயிரம் அடிகள் வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

 

cut down the entire  Eucalyptus trees in pudukottai;compliment to the farmer


இந்நிலையில் தைல மரங்களால் தான் நீர் குறைந்து வருகிறது என்பதை அறிந்த கொத்தமங்கலம் கணேசன் என்ற விவசாயி தனது 2 ஏக்கர் பரப்பளவில் நின்ற தைல மரக்காட்டை வேரோடு வெட்டி அழித்துவிட்டார். 

இது குறித்து கணேசன் கூறும் போது.. 

தண்ணீர் குறைய தைல மரங்கள் தான் காரணம் என்பதை தெரியாமல் 2 ஏக்கரில் தைல மரங்களை வளர்தேன். ஆனால் இப்போது தெரிந்ததும் நானே அழித்துவிட்டேன். என்னை போல விவசாயிகள் கொஞ்சம் கொஞ்சமாக தைல மரக்காடுகளை அழிப்பார்கள் என்று நம்புகிறேன். தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் எந்த விவசாயத்தையும் விவசாயிகள் செய்ய வேண்டாம் என்றார்.

cut down the entire  Eucalyptus trees in pudukottai;compliment to the farmer

அதேபோல நெடுவாசல் கிராமத்தில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்டுள்ள தைல மரக்காடுகளை அழித்துவிட்டு குருங்காடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தண்ணீர் குறைவதையடுத்து அதற்கான காரணிகளான தைல மரங்களையும், சீமைக்கருவேல மரங்களையும் விவசாயிகளே முன்வந்து அழிக்க தொடங்கி இருப்பது நல்ல முன்னுதாரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

மேலும் இதேபோல ஒவ்வொரு விவசாயியும் முன்வர வேண்டும். அப்போதுதான் நம்மை நாம் காக்க முடியும் ஆனால் அரசாங்கம் காப்புக்காடுகளை அழித்துவிட்டு தைல மரக்கன்றுகளை நட்டு வருவது தான் அரசாங்கமே வறட்சியை ஏற்படுத்துவது போல உள்ளது என்கின்றனர் வேதனையுடன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.