Skip to main content

திருச்சி தேமுதிக வேட்பாளரின் தற்போதைய நிலை இது தான் !

Published on 24/03/2019 | Edited on 24/03/2019

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு திருச்சி எம்.பி.தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் அவைத் தலைவர் தர்மபுரியை சேர்ந்த டாக்டர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இ.பி.எஸ்.ஊரை சேர்ந்த இவர் நீங்க  போய் நில்லுங்க எல்லாம் அங்க உள்ள மந்திரி மா.செ. பாத்துக்குவாங்க சொல்லி அனுப்பி வச்சிருக்காங்க. திருச்சிக்கு முதல் முதலாக வரும் போதே வரவேற்க கூட்டணி கட்சியினர் யாரும் இல்லாமல் தனியே வந்து இறங்கி அதன் பிறகு கூட்டணி கட்சியினரை போய் சந்தித்தார். 

 

dmdk

 

திருச்சி அரசு மருத்துவனை அருகே இன்று கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இன்று காலை திறக்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தனர். காலையிலே தனி ஆளாக ஆஜர் ஆனார் வேட்பாளர். அதன் பிறகு 10.30 பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் வந்தனர். 10.40க்கு முன்னாள் அமைச்சர் 5 பேருடன் தனியாக காரில் வந்தார். 10.50 பிஜேபி மாநில அமைப்பு செயலாளர் ஆஸ்போர்டு சுப்ரமணியன் தனிய ஆளாக வந்து சேர்ந்தார். 10.55க்கு அ.தி.முக. மா.செ. குமார் தன் படைகளுக்கு சரசரவென்று உள்ளே நுழைந்தார். 11.05க்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன். அமைச்சர் ஆகியோர் வந்து இறங்கினார். வந்து இறங்கும் போதே 11.30 மணிக்கு தானே திறப்பு விழா என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார். 

 

வந்த கூட்டணி கட்சியினர் அனைவரையும் வேட்பாளர் இளங்கோவன் வெளியே வந்து வரவேற்று அழைத்து சென்றார். இப்படி எல்லோரும் வந்தவுடன் மா.செ. குமார் உடனே திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்து அடுத்த 5 நிமிடத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கையில் ரிப்பன் வெட்ட சொல்லி அடுத்து குத்து விளக்கு என திறப்பு விழாவை முடிந்தனர். 

 

வேட்பாளர் திருச்சிக்கு வந்து 5 நாட்களில் மட்டும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் தரப்பில் மட்டும் 10 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நடத்தின அத்தனை நிகழ்ச்சிகளுக்கு இவரே தன் கையில் இருந்து செலவு செய்தனர். அ.தி.மு.க.வை சேர்ந்த பகுதி செயலாளர், வட்ட செயலாளர்கள் வேட்பாளரை நெருங்கி தேர்தல் செலவுக்கு எப்போ பணம் தருவீங்க என்று கேட்க, உங்களுக்கு உங்கள் அமைச்சர்கள், மற்றும் மா.செ. தான் பொறுப்பு அவுங்க கிட்ட கேளுங்க, என்று சொல்லிவிட்டார். இது தொடர்பாக திருச்சி அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி அதேபோல் புதுக்கோட்டை அமைச்சர் விஜயபாஸ்கர் பணத்தை வெளியே எடுக்கவில்லையாம்.

 

dmdk

 

கட்சியின் திறப்பு விழாவிற்கு அனைத்து கட்சியினரை அழைப்பதற்கே தேமுதிக வேட்பாளருக்கு போது போதும் ஆகி விட்டதாம். இப்பதான் ஆரம்பிச்சிருக்கு இன்னும் 25 நாள் இருக்கே என்ன பண்ண போறோம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டாராம். லோக்கல் அமைச்சர் வெல்லமண்டி தன் வட்ட செயலாளர்களை அழைத்து முதல் கட்டமாக 5,000 ரூபாய் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள். கட்சிக்காரர்கள்,  திருச்சி எம்.பி. தொகுதியில் 3 அமைச்சர்கள், 2 எம்.பிகள் இருக்கிறார்கள் என்கிற தைரியத்தில் களத்திற்கு வந்த தேமுதிக வேட்பாளரின் நிலையை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது என்கிறார்கள் தேமுதிக தீவிர தொண்டர்கள். 

 

தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் நாளை நடக்கிறது. அதன் பிறகு எல்லாம் சரியாகும் என்று நினைக்கிறார்கள் கட்சியினர்.  இது தான் தற்போதைய திருச்சி தேமுதிக வேட்பாளரின் நிலை !

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.