ADVERTISEMENT

"அ.தி.மு.க.வில் தற்போதுள்ள நிலைமை வருத்தமளிக்கிறது"- டிடிவி தினகரன் பேச்சு!

11:05 PM Aug 15, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸில் அ.ம.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (15/08/2022) காலை 10.30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது பேசிய டிடிவி தினகரன், "அ.தி.மு.க.வில் தற்போதுள்ள நிலைமை வருத்தமளிக்கிறது. அ.தி.மு.க. தற்போது அக்மார்க் சுயநலவாதியிடம் உள்ளது. பதவி ஆசை இருக்கலாம்; ஆனால் பதவி வெறி இருக்கக் கூடாது. 90% ஆதரவு இருந்தால் தேர்தலை நடத்த வேண்டியது தானே. அடுத்த ஆண்டு திருச்சியில் அ.ம.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு தேசிய கட்சிகளில் ஒன்றில் நாங்கள் கூட்டணி; அதில் தி.மு.க. இடம்பெறாது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

அ.ம.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT