தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை தனித்தனியே வேண்டுக்கோள் விடுத்திருந்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அந்த வேண்டுக்கோளை மீறி மார்ச் 26ந்தேதி ( ஊரடங்கு உத்தரவு 2 வது நாள் ) இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த இளைஞர்களின் 25 இருசக்கர வாகனத்தை ஆம்பூர் புறவழிச்சாலை சாலையில் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் மற்றும் ஆம்பூர் நகர காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து அபரதாம் விதிக்க முடிவு செய்துள்ளது காவல்துறை.
ஊரடங்கு உத்தரவின் முதல் நாளே திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் பகுதிகளில் சுமார் 20 வழக்குகள் காவல்துறை பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.