Advertisment

ஊரடங்கு விதிமீறல் - 9.53 கோடி வசூல்... 5,32,401 வழக்குகள் பதிவு!

ரப

Advertisment

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

இந்தியாவில் 4 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்துள்ள நிலையில், 5 ஆம் கட்ட ஊரடங்கு தற்போது நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,69,578 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.9.53 கோடி அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. 4,40,843 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 5,32,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe