ADVERTISEMENT

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!

01:27 PM Jul 30, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது. வரும் 31ம் தேதியோடு தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைவதால், மாவட்ட ஆட்சியர்களோடு முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவ வல்லுநர் குழுவோடு முதல்வர் ஆலோசனை நடத்தினார். அலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் இயங்க தடை தொடரும். பேருந்து சேவை ஆகஸ்ட் 31ம் தேதி தடை செய்யப்படுகின்றது. இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதுபோல், அடுத்தமாதமும் கடை பிடிக்கப்படும் என்று தெரிவித்தார். பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT