Skip to main content

உதயநிதி பிறந்தநாள் கபடி போட்டி; அமைச்சர்கள் பங்கேற்பு

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

தி.மு.க மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி நெய்வேலி தொகுதி கொள்ளுக்காரன்குட்டையிலுள்ள வள்ளலார் மெட்ரிக் பள்ளி வளாகம் எதிரில் நடைபெற்றது. கபடி போட்டியைக் கடந்த 19ஆம் தேதி நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

 

லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலீஸ், தமிழக வனத்துறை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, கடலூர், நெய்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கபடி வீரர்கள் பங்கேற்றனர். கபடி போட்டியை அரங்கம்  முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

 

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு காவல்துறையும் - டெல்டா ஸ்டோர்ஸ் வடுவூர் அணிகளும் பங்கேற்றனர். இறுதியில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது. இதேபோல் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் சிட்டி போலீஸ் அணியும், ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணியும் விளையாடின. இறுதியில் சென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி பெற்றது.

 

போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளையும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினர். முதல் பரிசு வென்ற ஆண்கள் பிரிவு அணிக்கு ரூபாய் 1,50,000, பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூபாய் 75,000 வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய குழுத் தலைவர் சபா.பாலமுருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், த.வா.க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால்வளவன், டி.எஸ்.பி ஷபிபுல்லா, ராஜேந்திரன், தொ.மு.ச பேரவை இணை பொதுச்செயலாளர் சுகுமார், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன்,  நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, என்.எல்.சி தொ.மு.ச தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் பாரி, பொருளாளர் ஐயப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் புகழேந்தி, அறிவழகன், பண்ருட்டி துணை சேர்மன் தேவகி ஆடலரசன், நெய்வேலி நகர அவைத்தலைவர் நன்மாற பாண்டியன், கபடி சங்கம் மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் ஸ்டாலின், வள்ளலார் கல்வி குழும நிர்வாகிகள், தி.மு.க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.