Skip to main content

திருமணமான 4 நாட்களில் இளம்பெண்ணை ஏமாற்றிய கணவன்; மணக் கோலத்தில் கைது 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

cuddalore two wheeler mechanic young women second marriage incident 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் இருசக்கர வாகனங்களுக்கு பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஆர்.எஸ்.மணி நகரைச் சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் (வயது 31) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியனுக்கும் ரவியின் மகள் ரம்யாவுக்கும் (வயது 29) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாக மாறியுள்ளது. ரம்யாவிடம் திருமணம் செய்து கொள்வதாக சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் ரம்யா கருவுற்றார். இந்நிலையில் கருவை கலைக்குமாறு சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் ரம்யாவும் கருவை கலைத்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம்  27 ஆம் தேதி சுப்பிரமணியனுக்கும் இளம்பெண் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனையறிந்த ரம்யா தன்னை ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது சுப்பிரமணியன், புகாரை வாபஸ் பெற்றால் திருமணம் செய்து கொள்வதாக ரம்யாவிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனை நம்பிய ரம்யா புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் இருவரும் கடந்த 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். அச்சமயம் சுப்பிரமணியனுக்கும் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணுக்கும் நேற்று  திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரம்யாவுக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் வீட்டின் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த போலீசார் ரம்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுப்பிரமணியன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார் என ரம்யா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என ரம்யா கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மணக் கோலத்தில் இருந்த சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.