Skip to main content

திருமணமான 4 நாட்களில் இளம்பெண்ணை ஏமாற்றிய கணவன்; மணக் கோலத்தில் கைது 

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

cuddalore two wheeler mechanic young women second marriage incident 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எல்.என்.புரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் இருசக்கர வாகனங்களுக்கு பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஆர்.எஸ்.மணி நகரைச் சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்பிரமணியன் (வயது 31) என்பவர் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சுப்பிரமணியனுக்கும் ரவியின் மகள் ரம்யாவுக்கும் (வயது 29) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாக மாறியுள்ளது. ரம்யாவிடம் திருமணம் செய்து கொள்வதாக சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் ரம்யா கருவுற்றார். இந்நிலையில் கருவை கலைக்குமாறு சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனால் ரம்யாவும் கருவை கலைத்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம்  27 ஆம் தேதி சுப்பிரமணியனுக்கும் இளம்பெண் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனையறிந்த ரம்யா தன்னை ஏமாற்றிய சுப்பிரமணியன் மீது கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது சுப்பிரமணியன், புகாரை வாபஸ் பெற்றால் திருமணம் செய்து கொள்வதாக ரம்யாவிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனை நம்பிய ரம்யா புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் இருவரும் கடந்த 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். அச்சமயம் சுப்பிரமணியனுக்கும் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த பெண்ணுக்கும் நேற்று  திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரம்யாவுக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் வீட்டின் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்த போலீசார் ரம்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சுப்பிரமணியன் தன்னை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டார் என ரம்யா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளார் எனத் தெரிவித்துள்ளார். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என ரம்யா கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை மணக் கோலத்தில் இருந்த சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.