Skip to main content

கடலூர்- மூன்றாண்டுகளாக முடிக்கப்படாத சாலையால் அவதி!!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

 

 

மூன்று ஆண்டுகள் கடந்தும்  முடிக்கப்படாத சாலையால் வாகன ஓட்டிகள்,  பொதுமக்கள் அவதி,   பாதி வேலையில் நிற்கும் பாலங்களால் விபத்து எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து பரங்கிப்பேட்டையை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான பணி கடந்த 20.07.2015 அன்று தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மாநில நெடுஞ்சாலையான இச்சாலையானது சுமார்  64 கிலோ மீட்டர் தொலைவினலானது.  இச்சாலை பணிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் உலக வங்கியின் மூலம் பெற்ற கடன் உதவி என  162 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெங்களுரை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு 17.01.2018 க்குள் முடித்துவிட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் அதே சாலையில் வளையமாதேவியில் முகாமிட்டு சாலை பணிகளை செய்து வந்தனர்.

 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு துறைமுகங்களில் ஒன்று பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ளது. இதனால் விருத்தாசலம் வழியாக  சேலம், திருச்சி மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களுக்கு,  கடல்வழி மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு பெரிதும் வழிவகுக்கும் என்று அமைக்கபட்ட இந்த சாலை பணிகள் இழு இழு என இழுத்துக்கொண்டிருப்பதால் இச்சாலை பணிகள் முடித்து எப்போது முழுமையான பயன்பாட்டிற்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 

 

 

இந்த சாலை வழியாக சிதம்பரத்திலிருந்து விருத்தாசலம் வழியாக சேலம், கள்ளக்குறிச்சி,  கோவை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் மற்றும் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய சிதம்பரம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம் போன்ற நகரங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முழுவதும் முடிவடையாத பாலங்கள், பாதி, பாதியாக போடப்பட்டிருக்கும் சாலையால் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிப் படுவது மட்டுமில்லாமல்,  15 கிலோமீட்டர் சென்று வருவதற்கே உடம்பு வலி, வாகனங்கள் ஏற்படுத்தும் மண் புழுதியால் மூச்சு திணறல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அதுமட்டுமில்லாமல் கிராமங்களில் இருந்து சைக்கிள் மூலமாக பள்ளிக்கு  செல்லும் சிறுவர்களுக்கு சாலையில் உள்ள மேடு, பள்ளங்களால் உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளதாக  பெற்றோர்கள் பிள்ளைகள் வீடு திரும்பும் வரை அச்சத்துடனே உள்ளனர். 

 

பாலம் கட்டும் பணியானது பாதியிலேயே நிற்பதினால், பாலத்தின் வெளியே தெரியும் இரும்பு கம்பிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாததால், எந்த சூழ்நிலையிலும் தவறி விழுபவர்களுக்கு உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும் பாதி வேலை முடிந்துள்ள பாலங்கள், பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள், தடுப்பு வேலிகள், இரவில் மிளிரும் ஒளிப்பான்கள் போன்றவைகள் எதுவும் சரிவர அமைக்கப்பாடததால், புதிதாக பயணிக்கும் நபர்கள் அச்சத்துடன் பயணிப்பதும், ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்படும் சூழலும் உள்ளதாக கூறுகின்றனர். 

 

 

 

 

புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலையானது சில இடங்களில்  தரமற்ற முறையில் அமைப்பதாகவும், இரண்டாக பிளவு படுவதாகவும் கூறி ஆங்காங்கே பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்திய பிறகு கண் துடைப்புக்காக 'பேட்ச் ஒர்க்' மட்டும் நடந்து வருகின்றன. முன்னதாக இச்சாலை பணியை தொடங்கும் போது சாலையோரமிருந்த வீடுகள், நிலங்கள், மரங்கள் போன்றவற்றை கையகப்படுத்த முற்பட்ட போது  நிவாரண தொகை குளறுபடிகளால்  பல்வேறு போராட்டங்கள் நடந்தன.  ஆனால் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற காவல்துறை மூலம், அடக்குமுறை கையாண்ட தமிழக அரசானது,  குறிப்பிட்ட நேரத்தில் சாலை பணியை முடிக்காத ஒப்பந்தாரர்களின் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

 

இந்த சாலை பணிக்காக ரூ.162 கோடிக்கு மேல் ஒப்பந்தம் செய்யப்பட்டு,  சாலை போடுவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து 8 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், முழு வேலையும் முடிக்கபடாமல் இருப்பதாலும்,  அதற்குள் சாலையில் பல்வேறு இடங்களில் பிளவு ஏற்பட்டு வருவதினாலும்,  இந்த சாலை பணியில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இந்த சாலையை ஒப்பந்தம் செய்த நிறுவனம் சாலை பணியை முழுவதுமாக முடிக்காமல் இழுப்பதால்  தமிழக அரசு மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  இச்சாலை பணிகளை முழுமையாக முடித்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பான பயணத்துக்கு வழி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.