Skip to main content

கணவனை இழந்த பெண்ணை கத்தியால் குத்திய ஆண் நண்பர்! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

cuddalore srimushnam woman case police arrested her boy friend

 

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள முடிகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (32 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் சாந்தி, சேத்தியாத்தோப்பில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை செய்துவந்தார். 

 

இந்த நிலையில், சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள பூக்கடையில் வேலை செய்யும் மணிவண்ணன் (30) என்பவருக்கும் சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் மிகவும் நெருக்கமாக மாறியுள்ளது. அவ்வப்பொழுது இவர்கள் இருவரும் தனிமையிலும் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் சாந்தியின் குடும்பத்திற்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சாந்தியை வேலைக்கு செல்லவிடாமல் வீட்டில் இருக்க வைத்துள்ளனர். 

 

சாந்தியைச் சந்திக்க முடியாத அவரது ஆண் நண்பர் மணிவண்ணன் நேற்று முன்தினம் இரவு, சாந்தியின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்துள்ளார். அப்போது சாந்தி தன்னை தேடி இனிமேல் வரக்கூடாது என்று கடும் கோபத்துடன் கூறியுள்ளார். இதை கேட்டு கோபமடைந்த மணிவண்ணன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து சாந்தியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுனர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோழதரம் காவல் நிலைய போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாந்தியைச் சந்தித்து அவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ஸ்ரீமுஷ்ணம் பொறுப்பு காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை கத்தியால் குத்திய மணிவண்ணனை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.