Skip to main content

ஆட்டோ கவிழ்ந்து விபத்து... பள்ளி மாணவர்கள் படுகாயம்.

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள தூய இருதய பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 2000- த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள முதனை, இருப்புக்குறிச்சி, எடக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு ஒரு சில நேரங்களில் மட்டும் குறிபிட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 

ஆதலால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், அரசக்குழி கிராமத்தில் இருந்து ஷேர் ஆட்டோவையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்  இருப்புக்குறிச்சியில் உள்ள பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோ மூலம் 7- ஆம் வகுப்பு மாணவி சோனா ஆப் ஆர்க்,  ஆசிரியை மார்க் ரேட், 12- ஆம் வகுப்பு மாணவன் கதிரவன் மற்றும் முகேஷ் உடன்  ஆட்டோ டிரைவர் ராய் ஓட்டி வந்துள்ளார். அப்போது இருப்புகுறிச்சி கிராமத்தை அடுத்து உள்ள வளைவில் செல்லும் போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது. 

CUDDALORE SHARE AUTO INCIDENT STUDENTS ADMIT AT HOSPITAL


இதனால் ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊமங்கலம் காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த பள்ளி மாணவர்களை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன. 

இதில் 12- ஆம் வகுப்பு மாணவர்களான முகேஷ் மற்றும் கதிரவன் மேல் சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் கொண்டு சென்றனர். மேலும்  தொழில் போட்டியின் காரணமாக ஷேர் ஆட்டோக்கள் வேகமாக செல்வதால், அச்சத்துடன் பயணிப்பதாக பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இச்சம்பவத்தால் பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகம் நிலவி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.