கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை ஒன்றியம் கோவிலாம்பூண்டி கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு பயிலும் மாணவி பா.நிஷா கடலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் வள மேலாண்மை என்ற தலைப்பில் அறிவியல் செயல் விளக்கத்தை செய்து, மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள், சமூகஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.