Skip to main content

ரவுடிகள், கள்ள மது விற்பனையாளர்களை அதிரடியாக கைது செய்த காவல்துறை!

Published on 02/10/2019 | Edited on 02/10/2019

கடலூர் :  விருத்தாசலத்தில்  குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட  7 ரவுடிகள், மது விற்ற 5 பேர் உள்ளிட்ட 12 பேரை அதிரடியாக கைது செய்தது காவல்துறை. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் உட்கோட்ட எல்லையில் கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம், ஆலடி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலையங்கள் உள்ளன. இக்காவல் நிலையங்கள் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு குற்ற சம்பங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், ரவுடிகளையும் பிடிப்பதற்காக காவல் துணை கண்காணிப்பாளார் தீபா சத்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். 

cuddalore rowdies ilegal liquor sales persons arrested in police

அதன் அடிப்படையில் பல்வேறு குற்ற சம்பங்களில் ஈடுபட்டவர்களை தனிப்படை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக குற்ற செயலில் ஈடுப்பட்ட ஏழு பேரை தனிப்படை காவல்துறையினர் பிடித்து கைது செய்தனர். இதேபோல் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் விருத்தாசலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் கள்ள தனமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் இரண்டு பெண்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஜந்து பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 100- க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து காவல் துணை கண்காணிப்பாளர் தீபா சத்யன் கூறுகையில், " விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள காவல் நிலையங்களில் பல்வேறு  குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து, கைது செய்தும், குற்ற சம்பவத்தை குறைக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். 

cuddalore rowdies ilegal liquor sales persons arrested in police


மேலும் இனி வரும் காலங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் குறற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால், பொதுமக்கள் எவ்விதத்திலும், ரவுடிகளை கண்டு அச்சப்பட வேண்டாம் என்றும்,  மேலும் காவல்துறை என்பது பொதுமக்களுக்காக செயல்படுவதால், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்காக ரவுடிகள் மீது அதிரடி வேட்டை தொடரும்" என்றும் கூறினார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.