Skip to main content

பாதிப்படையும் சக காவலர்களின் குடும்பத்துக்கு 'வாட்ஸ் ஆப் குழு' மூலம் உதவும் காவலர்கள்! 

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

2003- ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் பயிற்சி முடித்து அனைத்து மாவட்டங்களிலும் தலைமை காவலர்களாக பலரும் பணியாற்றி வருகிறார்கள்.அந்த 182 தலைமை காவலர்கள் 'வாட்ஸ் ஆப் குழு' மூலம் ஒன்றிணைந்து தங்களுக்கிடையேயான செய்திகளை பறிமாறி கொண்டு வருகிறார்கள்.

CUDDALORE POLICE TRAINING 2003 BATCH POLICE OFFICERS  HELP TO OTHER POLICE FAMILY HELP

2003- ஆம் ஆண்டு கடலூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த பிரபு, வேலு ஆகியோர் இறந்துவிட்ட நிலையில், இவர்களது குடும்பத்திற்கு உதவி செய்யலாம் என வாட்ஸ்அப் குருப் மூலம் தகவல் பறிமாற்றம் செய்து முடிவெடுத்தனர். அதன் அடிப்படையில் இறந்து போன பிரபுவின் மகன் அரிமித்ரன் கல்வி செலவுக்காக தபால் நிலையத்தில் ரூபாய் 1,00,000 KVP பத்திரத்தில் டெபாசிட் செய்தும், பிரபுவின் மனைவி மீனாட்சி பெயரில் சேமிப்பு கணக்கு ரூபாய் 70,000மும் டெபாசிட் செய்யபட்டது. மேலும் இறந்து போன மற்றொரு காவலர் வேலு மகள்கள் ஸ்ருதிதேவி, விஜயபாரதி, மகன் மெளலி கார்த்திகேயன் ஆகியோருக்கு தனித்தனியாக ரூபாய் 51,000 KVP பத்திரம் டெபாசிட் ஆக  1,53,000 ரூபாய் செய்யபட்டது. 

CUDDALORE POLICE TRAINING 2003 BATCH POLICE OFFICERS  HELP TO OTHER POLICE FAMILY HELP

2003- ஆம் ஆண்டு பயிற்சி முடித்து உடல்நலக்குறைவால் வேலை செய்ய முடியாத காரணத்தினால் பணிநீக்கம் செய்யபட்ட தர்மா (எ) தனசேகர் என்பவரின் பெண்குழந்தை மோக்திஷாஸ்ரீ முடக்குவாத நோயால் திருநெல்வேலி மயோபதி காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு ரூபாய் 1,60,000 பணத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M. ஸ்ரீஅபிநவ் வழங்கினார். வாட்ஸ் ஆப் குழு மூலம் இணைந்து பாதிப்படையும் குடும்பத்தார்க்கு உதவி செய்யும் காவலர்களின் மனிதநேயம் பாராட்டுக்குரியதாக இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மனைவி வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்; பதறி அடித்து போலீசிடம் ஓடிய கணவர்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
The husband ran to the police in panic for Whatsapp status by wife

உத்தரப்பிரேதசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்து போன மனைவி, தனது கணவனை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். மேலும், அவர் நிரந்தரமான விவாகரத்து கேட்டும் வந்துள்ளார். இதனிடையே, கணவரை விட்டு பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். 

இதனையடுத்து, தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை, சமாதானம் செய்வதற்காக மனைவி வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார். ஆனால், அங்கு, மனைவி வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ‘மனைவியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். மேலும், மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே தகராறுக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகாரை அடுத்து கோபமடைந்த மனைவி, தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ‘என்னுடைய கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத்தொகை உடனடியாக வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார். இந்த விவரம் கணவருக்கு தெரியவர, பதறி அடித்து போன அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று இந்த விவகாரம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும், இந்த தம்பதிகள் மாறி மாறி அளித்த புகார்கள் மீது கண்டு கொள்ளாமல் இருந்த போலீசார், இந்த முறை பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்ட அவர்கள், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.