Skip to main content

கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடன் உடலில் பெட்ரோலை ஊற்றிய வாலிபர்... உயிரை பணயம் வைத்து மீட்ட முதன்மை காவலர்

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

கழுத்தில் நாட்டு வெடிகுண்டுடனுமும், உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து வந்த வாலிபரை மீட்டுள்ளார் முதன்மை காவலர். 

 

cuddalore police saves a man

 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் மணிகண்டன்.  இவரது மனைவி ஜெபமேரி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது. இவர்களுக்கு 8 மாதம் ஆண்  குழந்தை ஒன்று உள்ளது. மணிகண்டன் தொடர்ந்து குடி பழக்கத்திற்கு ஆளானதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி ஜெபமேரி கணவரை வீட்டு தாயுடன் வாழ்ந்து வருகிறார்

இந்நிலையில்  நெய்வேலி நகரத்தில் உள்ள 25 ஆம் நம்பர் பிளாக்கில் உள்ள தனது  மாமியார் வீட்டின் முன்பு மணிகண்டன் தனது கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டு, கையில் பெட்ரோல் கேனுடன்,  தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்க கோரி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.  இதனை பார்த்த மணிகண்டனின் மாமியார் தெருவில் வந்து கூச்சலிட்டு உள்ளார். அப்போது  அவ்வழியாக வந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் கூச்சலிட்ட பெண்ணிடம் விசாரித்து, வீட்டினுள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.  வீட்டினுள் சக்தி வாய்ந்த வெடிகுண்டை தனது கழுத்தில் சுற்றி கொண்டு, உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தீப்பெட்டியை பற்ற வைக்க முயற்சித்துள்ளார் . முதன்மை காவலர் பாலச்சந்திரன் உயிரை பணயம் வைத்து, சூசமாக பேசி தற்கொலை செய்து கொள்ளாமல் பல மணி நேரமாக தடுத்து கொண்டிருந்தார்.

ஆனால் மணிகண்டன் விடாப்பிடியாக தற்கொலை செய்து கொள்ள போவதாக, கூறிக் கொண்டு இருந்ததால், பொதுமக்கள் பயத்தில் யாரும் செல்லவில்லை. தனது மனைவியை தன்னிடம் சேர்த்து வைக்குமாறு கூறி கொண்டு இருந்தார்.  இந்நிலையில் விபரீதத்தை உணர்ந்த  காவலர் பாலச்சந்திரன் நெய்வேலி நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சங்கர் மற்றும் காவலர் ராஜியும் சமாதானம் பேசி மணிகண்டனை மீட்க முயன்றனர். இறுதியில் மணிகண்டனின் எட்டு மாத குழந்தையை தூக்கி கொண்டு, முதன்மை காவலர் பாலச்சந்திரன் மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளுவோம் என்று துணிச்சலாக மணிக்கண்டனிடம் சென்றதும், அழுதபடியே தற்கொலை முயற்சியை கைவிட்டு குழந்தையை தூக்கியதும், அவரது உடலில் இருந்த வெடிக்குண்டுகளை அகற்றிவிட்டு, உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார். 

பின்னர் மணிக்கண்டன் தான் விஷம் அருந்தியதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலிலும் துணிச்சலாகவும், சாதூர்யமாகவும் பேசி மணிகண்டனை காப்பாற்றிய முதன்மை காவலர் பாலச்சந்திரனை அங்கு குவிந்திருந்த பொதுமக்கள் பாராட்டினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

போதைப்பொருள் விற்பனை; கடலூரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

pondicherry police filed case for four cuddalore youngsters 

 

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்த கடலூரை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புதுச்சேரியில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு எஸ்.எஸ்.பி நாரா சைதன்யா, எஸ்.பி (கிழக்கு) ஸ்வாதி சிங் ஆகியோரின்உத்தரவின் பேரில் உருளையன்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாபுஜி, குற்றப்பிரிவு காவலர்கள் சத்தியவேலு, பிரேம்குமார், செல்லதுரை, மணிகண்டன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை தேடி வந்தனர்.

 

இந்த நிலையில் நேற்று (23.03.2023) காலை 07.30 மணியளவில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் சோதனை செய்தபோது, கிழக்கு பக்கமாக அமைந்துள்ள கழிப்பறை அருகில் பொதுமக்களுக்கும், கஞ்சா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த கடலூர் திருப்பாப்புலியூரை சேர்ந்த குப்புசாமி மகன் ஜீவா என்கிற ஜீவானந்தம் (வயது 23), ராமலிங்கம் என்பவரது மகன் மேகி என்கிற மகேஷ் (வயது 21), வன்னியர்பாளையம் சிவசுப்பிரமணியம் மகன் ரேவந்த் (வயது 25), மஞ்சக்குப்பம் தட்சிணாமூர்த்தி மகன் ஆதித்தியன் (வயது 26) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 1400 கிராம் கஞ்சா அடங்கிய 140 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் சாமலகோட்டையை சேர்ந்த திருப்பதி என்பவரிடம் கஞ்சா இலைகளை வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்ற நடுவர் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.