Skip to main content

குடிப்பதற்கு பணம் இல்லாததால் கணவரின் கீழ்த்தரமான செயல்..! காவல்துறையால் கைது..

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

Cuddalore police arrested jeyamani

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் பண்ருட்டியில் பூக்கடை ஒன்றில் வேலை செய்யும் எல்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை (எ) ஜெயமணி (31) என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடிப்பழக்கத்தற்கு அடிமையான ஏழுமலை, சரியாக வேலைக்குச் செல்வதில்லை. இதனால் வருமானம் இல்லாததால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார்.


கடந்த ஓராண்டுக்கு முன்பு மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ஜெயமணி சத்து மாத்திரை என்ற பெயரில் சில மாத்திரைகளை சாந்தியிடம் கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்டதும் சாந்தி மயக்கமடைந்துள்ளார். மனைவி மயங்கி கிடந்த நிலையில் வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த தனது நண்பரான சுந்தரமூர்த்தி என்பவரை வரவழைத்து தனது மனைவியிடம் உறவுகொள்ள சொல்லியுள்ளார். மயக்கம் தெளிந்த மனைவி நடந்த சம்பவத்தை அறிந்து கணவருடன் சண்டை போட்டுள்ளார்.

 

இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் குடிபோதையில் இருந்த ஜெயமணி, தன்னுடன் பூ வியாபாரம் செய்யும் மற்றொரு நண்பரான மணிகண்டன் (26) என்பவரை அழைத்து தனது மனைவிடம் தகாத முறையில் நடந்துகொள்ள கூறியுள்ளார். மறுத்தால் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் மிரட்டியுள்ளார். 

 

இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி சாந்தி, கணவன் ஏழுமலையை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். அங்கும் கணவன் ஏழுமலையின் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் சாந்தி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், தனது கணவர் குடும்பம் நடத்தாததால் அவரது நண்பர்களை அழைத்துவந்து தன்னை தவறான பாதையில் நடத்த வற்புறுத்துகிறார். மீறினால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் மிரட்டுகிறார். எனவே ஏழுமலை உள்ளிட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

 

அதையடுத்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து ஏழுமலை, சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழுமலை குடிக்கப் பணம் இல்லாததால், தனது மனைவி அழகாக இருப்பார் அப்படி, இப்படி என அவருடன் இருக்கும் மற்ற நண்பர்களுக்குத் தெரிவித்து, அவர்களிடம் பணம் வாங்கி குடித்துள்ளார். பணத்தைக் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்கும்போது 'தற்போது தன்னிடம் பணம் இல்லை. வேண்டும் என்றால் தனது மனைவியுடன் தகாத முறையில் உறவு வைத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறி இதுபோன்று தொடர்ந்து தவறான செயலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.