Skip to main content

மழைவேண்டி வருண பூஜை யாகம்..!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

cuddalore people pray for rain


சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, பெண்ணையாற்றின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட மக்களின் தாகத்தையும் விவசாயத்தின் தேவையையும் நிறைவு செய்து கடலூர் அருகே கடலில் சென்று கலக்கிறது.


திருக்கோவிலூர் அருகே இரண்டாகப் பிரிந்து மலட்டாறு என்ற பெயருடன் அரசூர் கடந்து பண்ருட்டி வழியே சென்று கடலில் கலக்கிறது. இந்த மலட்டாற்றில் அதிகப்படியான மழை பெய்து பெண்ணையாறு நிரம்பி அதன் உபரி மலட்டாறில் செல்லும். இதன் கரையோர கிராமங்கள் இதன் மூலம் பாசனம் பெறும். 1972ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணல் திட்டுகள் ஏற்பட்ட பிறகு தண்ணீர் வருவது குறைந்துவிட்டது. 


இதையடுத்து ஜீவநதி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் 1991ஆம் ஆண்டு அரசுக்கு முறையிட்டு பொதுப்பணித்துறை மூலம் மலட்டாறில் ஏற்பட்ட மணல் திட்டுக்களை அகற்றியுள்ளனர். அதன்பிறகு, அதிகப்படியான மழை பெய்யும்போது மலட்டாறில் வெள்ளம் வரும். மற்ற காலங்களில் வறண்டு கிடக்கும். இதனால் இதன் கரையோர கிராம மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் மிகுந்த சிரமம் அடைவார்கள். 


தற்போது மழை காலம் நெருங்கி வருவதால் மலட்டாற்றில் வெள்ளம் வர வேண்டும் என்பதற்காக ஜீவநதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் இன்று வருண பூஜை நடத்தினார்கள். ஜீவநதி அமைப்பைச் சேர்ந்த தஷ்ணாமூர்த்தி தலைமையில் வேத மந்திரங்கள் ஒலிக்க, ஆற்றின் மையப்பகுதியில் முதலில் கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு, பிறகு மழைக்கு அதிபதியான வருண பகவானையும் இந்திரனையும் வேண்டி வழிபாடு செய்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

 

cnc

 

வழிபாடு நடத்தினால் 90 நாட்களுக்குள் மழை பெய்து மலட்டாறில் வெள்ளம் வரும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது. இந்த மலட்டாறின் மூலம் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வருண பகவானும் இந்திரபகவானும் கண்விழித்து எங்களைப் பார்க்க வேண்டும். நல்ல மழையைக் கொடுத்து எங்களை வாழவைக்க வேண்டும், என்றார்கள் கரையோர கிராம மக்கள். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.