Skip to main content

விபத்தில் லாரி டிரைவர் மரணம்; உடலை அடக்கம் செய்வதில் போட்டி

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

cuddalore panruti lorry driver incident in gujarat  

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள பழைய சன்னியாசி பேட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் முருகானந்தம் (வயது 48). இவருக்கு பராசக்தி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

 

முருகானந்தம் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச் சென்று இறக்கி விட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு சரக்கு ஏற்றிக்கொண்டு லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட விபத்தில் எதிர்பாராத விதமாக முருகானந்தம் இறந்து போனார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அவரது மனைவி பராசக்தி, தனது கணவரின் உடலை தான் வசிக்கும் வீட்டில் தான் வைத்து அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அப்போது முருகானந்தத்தின் தந்தை குப்புசாமி, தான் வசிக்கும் வீட்டில் தான் தனது மகனின் உடலைக் கொண்டு சென்று வைத்து பின்னர் அங்கிருந்து அடக்கம் செய்ய எடுத்துச் செல்ல வேண்டும் என்று வாதிட்டுள்ளார். இருவரும் இறந்து போன முருகானந்தம் உடலை தங்கள் வீட்டுக்குத் தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். இருவரில் ஒருவரும் விட்டுக் கொடுக்காததால், பராசக்தி நடுவீரப்பட்டு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். இறந்து போன முருகானந்தம் உடலை அடக்கம் செய்வதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதை அறிந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

பேச்சுவார்த்தையின் முடிவில் கணவன் இறந்து விட்டால், அவரது மனைவிக்குத் தான் அதிக உரிமை உள்ளது. எனவே, முருகானந்தம் உடலை பராசக்தி வசிக்கும் வீட்டில் வைத்து பிறகு அடக்கம் செய்வதற்கு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி முருகானந்தம் உடல் பராசக்தி வீட்டிலிருந்து உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அங்கு அனைவரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் நடுவீரப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.