Skip to main content

ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு போர்க்கொடி...

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

cuddalore panchayat meeting

 

கடலூர் மாவட்டம், கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமின் திட்ட அலுவலர் ராஜகோபால் அவர்களிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.

 

இந்தக் கூட்டமைப்பின் தலைவர் சுகுமாரன் தலைமையில் ஊராட்சித் தலைவர்கள் மருதநாடு சுரேஷ் (காரணப்பட்டு), தமிழரசி பிரகாஷ் (புதுக்கடை), கனகராஜ் (வரக்கால்பட்டு) மனோகர் மற்றும் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன், சரஸ்வதி, செல்வராஜ், வெங்கடேஸ்வரி உள்ளிட்ட பலரும் கூட்டாக சென்று மனு அளித்துள்ளனர்.

 

மனுவில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு உரிய அதிகாரம் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்றும் ஊராட்சி தேர்தல் நடைபெற்று ஓராண்டு முடிந்துவிட்ட நிலையிலும், ஊராட்சிகளுக்குத் தேவையான நிதி இன்றுவரை ஒதுக்கப்படவில்லை மற்றும் கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே செய்த ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை.

 

சிறப்பு அதிகாரிகளின் செயல்பாடுகளின் காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட புதிய சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பசுமை வீடு உட்பட ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் அரசு திட்டப் பணிகளை ஊராட்சி தலைவர்கள் மூலம் செயல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.’

 

இப்படி பல்வேறு கோரிக்கைள் அடங்கிய மனுவை ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பு வழங்கியுள்ளது. ஊராட்சிகளுக்கு அதிக அதிகாரமும் போதிய நிதியும் ஒதுக்கீடு செய்யுமாறு தமிழகம் முழுவதும் இதே போன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பலமாவட்டங்களில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர்கள் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கை மனுக்கள் அளித்து நடத்தி வருகிறார்கள்.

 

தமிழக அரசு இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனம் காட்டி வருவதாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் தரப்பில் கூறுகின்றனர். கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளை நேரடியாக மக்களைச் சந்தித்து நிறைவேற்றக் கூடியவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள்தான், ஆனால் அவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்குவதற்கும் போதிய நிதி ஒதுக்காமலும் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.